எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டுள்ளது என்று வெளிநாடு பயணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு...
தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.
ஆக. 30-ல் தொடக்கம்...
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் என்.ஆர்.டபுள்யூ எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ப் விமான நிலையத்தில் தரையிறங்கினேன்.
கொலோன் பல்கலை.,
ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர். அதன்பிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-ல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது.
ஓலைச்சுவடிகளை....
அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள டாக்டர் சுவன் வொர்ட்மேன் , ஸேரோன் நாதன, டாரியா லாம்பர்க்ட் ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.
நிறுவனங்களுடன்...
செப்டம்பர் 1 கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். டசல்டோர்ப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
முதலீட்டாளர் மாநாடு...
எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதல்வரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு என்.ஆர்.டபுள்யூ மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
ரூ. 7,020 கோடி முதலீடு...
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. செப்டம்பர் 2 அன்று காலையில் என்.ஆர்.டபுள்யூ மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
லண்டன் நகருக்கு...
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், என்.ஆர்.டபுள்யூ மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
பெரியாரின் படத்தை...
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
04 Sep 2025சென்னை, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்குமோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈட
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
நைஜீரியா: படகு கவிழ்ந்து 60 பேர் பலி
04 Sep 2025நைஜர்: நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: ஷிகர் தவான் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
04 Sep 2025புதுடெல்லி: சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஷிகர் தவான் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
04 Sep 2025புதுடெல்லி: கனிமங்கள் மறுசுழற்சிக்கு ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.