எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான். பட்டாசுக்களை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் பட்டாசுக்களை வெடிக்கும்போது கட்டாயம் பின்பற்றவேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம்.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி தண்ணீர், முதலுதவி பெட்டியை உடன் வைத்திருங்கள். வெடிக்கும் பட்டாசுகளை கையில் வைத்து தூக்கி எறியக் கூடாது. அருகில் தீப்பற்றும் எந்த பொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பட்டாசுகளை வெடிக்க திறந்தவெளி பகுதியை தேர்ந்தெடுங்கள். குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.
வெடித்த பட்டாசுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு வாளி தண்ணீரில் மூழ்க வைக்கவும். நல்ல தரமான, உரிமம் பெற்ற பட்டாசுகளை வாங்கவும், தரத்தில் சமரசம் செய்ய வேண்டாம். கால்களை முழுவதும் மூடும் காலணிகள் பயன் படுத்துங்கள். ஷூ பயன்படுத்துவது காலில் காயம் ஏற்படுவதை தடுக்கும். கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பட்டாசுகளுக்கு அருகில் அனுமதிக்காதீர்கள். மற்ற வயது குழந்தைகளை அவர்களாகவே பட்டாசுகளை பற்றவைக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசுகளை வெடிக்க நீண்ட பத்தியை பயன்படுத்தவும். பட்டாசுகளை பற்ற வைக்கும்போது முகத்தை பட்டாசுகளுக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம். குறிப்பாக குனிந்து பட்டாசு பற்றவைப்பதை தவிர்க்கவும். ஒருபோதும் சீரற்ற முறையில் பட்டாசுகளை வீசாதீர்கள். ஒன்றுக்கு மேல் பட்டாசுகளை ஒன்றிணைத்து பற்ற வைக்காதீர்கள். நைலான், பட்டு, சிந்தட்டிக் உடைகளை அணிய வேண்டாம். ஏனெனில் அவை விரைவாக தீப்பிடிக்கும். தீப்பிடிக்கக்கூடிய தளர்வான ஆடைகளையும் அணியாதீர்கள்.
வீட்டின் உட்புறத்திலோ அல்லது வாகன நிறுத்துமிட பகுதியிலோ ஒருபோதும் பட்டாசுகளை பற்றவைக்காதீர்கள். பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரின் ஆடையை அகற்றி, அவர் மீது போர்வை போர்த்துங்கள். கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் கண்ணை அழுத்தி தேய்க்காதீர்கள். அது காயத்தை அதிகப்படுத்திவிடும். பட்டாசு வெடித்த தீக்காயத்தின் மீது பற்பசை, எண்ணெய், மஞ்சள் தூள், மை தடவக்கூடாது. குளிர்ந்த நீரையோ, ஐஸ் கட்டியையோ கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. தண்ணீரில் 10 நிமிடங்கள் கழுவி விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
பட்டாசுகளை பற்றவைக்கும்போது உங்கள் பாக்கெட்டில் பட்டாசுகளை வைத்திருக்கக்கூடாது.மின் கம்பங்கள் அல்லது கம்பிகளுக்கு அருகில் ஒரு போதும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பட்டாசு ஒருமுறை வெடிக்கவில்லை என்றால் மீண்டும் நெருப்பு பற்றவைக்க முயற்சிக்கக்கூடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


