முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காக்கிநாடா டவுன் - கோட்டையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்கள் 07109/07110) இயக்கப்படுகிறது. அந்த வகையில், காக்கிநாடா டவுனில் இருந்து நவம்பர் 17, டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், கோட்டையம் டவுனில் இருந்து நவம்பர் 18, டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 11 மணிக்கு காக்கிநாடா டவுனை சென்றடைகிறது.

தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இதேபோல், மராட்டிய மாநிலம் ஹஜூர் சாகிப் நாந்தேட் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (07111/07112) இயக்கப்படுகிறது. ஹஜூர் சாகிப் நாந்தேட்டில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 22-ந் தேதி முதல் ஜனவரி 17-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு ஹஜூர் சாகிப் நாந்தேட்டை சென்றடைகிறது. 

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக செல்கிறது. மேலும், தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (07113/07114) இயக்கப்படுகிறது. சார்லபள்ளியில் இருந்து செவ்வாய்கிழமைகளில் நவம்பர் 18-ந் தேதி முதல் ஜனவரி 13-ந் தேதி வரை பகல் 11.20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடைகிறது. தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து