எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.23 - சென்னை வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகளை காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதோடு தகவல் கொடுப்பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23ந்தேதி துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக்கொள்ளை கும்பலைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வடமாநில மாணவர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மாணவர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் சிக்கினர். இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபாடு கொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர் வங்கிகளில் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படாத 400க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள போலீசார் ஒரு சில வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தபோது, அதில் சந்தேகத்திற்க்கிடமாக மாணவர் போன்ற தோற்றத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றிதிரிவது தெரிய வந்தது.
அந்த வாலிபருக்கும் வங்கி கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர் யார் என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் வட மாநில வாலிபர்கள் பலர் கட்டிட தொழிலாளர்களாகவும், ஓட்டல் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் தங்களது சொந்த மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களில் யாராவது வங்கி கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பற்றி உளவு பிரிவு போலீசாரும் கணக்கெடுத்து வருகிறார்கள். தங்களது பகுதியில் வசித்து வரும் வட மாநில வாலிபர்களை அந்தந்தப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொள்ளையர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.
கொள்ளையர்கள் பற்றி தகவல் கொடுப்பேருக்கு பரிசு வழங்கப்படும் என்று ,நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி அறிவித்துள்ளார். கொள்ளையர்களை பிடிக்க 9தனிப்படைபோலீசார் வெளிமாநிலம் சென்றுள்ளதாக ஆணையர் திரிபாதி கூறியுள்ளார்.
கண்காணிப்பு கேமிரா இல்லாத வங்கிகளில் உடனடியாக பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது பற்றி கமிஷனர் திரிபாதி தெரிவித்ததாவது:-பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் வங்கியில் பணிபுரிபவர்கள் குற்றவாளிகள் குறித்த தகவல்களை பின்வரும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலை பெற்றுக்கொள்வார். குற்றவாளிகளை குறித்த சரியான தகவல் அளிக்கும் நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானமாக வழங்கப்படும். அவர்களின் பெயர், விலாசம் மற்றும் விபரம் இரகசியமாக வைக்கப்படும்.தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் குற்றவாளிகளின் நிழற்படங்களை தொடர்ந்து வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொலைபேசி எண்கள்
98408 -14100, 99520 -91100
கொள்ளையர்கள் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வங்கி கிளைகளுக்கும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து நேரடி ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா வசதிகளை உடனடியாக ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாதாரண உடையிலும், சீருடையிலும் வங்கிகளில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025


