எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.23 - சென்னை வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகளை காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதோடு தகவல் கொடுப்பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23ந்தேதி துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக்கொள்ளை கும்பலைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வடமாநில மாணவர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மாணவர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் சிக்கினர். இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபாடு கொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர் வங்கிகளில் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படாத 400க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள போலீசார் ஒரு சில வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தபோது, அதில் சந்தேகத்திற்க்கிடமாக மாணவர் போன்ற தோற்றத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றிதிரிவது தெரிய வந்தது.
அந்த வாலிபருக்கும் வங்கி கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர் யார் என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் வட மாநில வாலிபர்கள் பலர் கட்டிட தொழிலாளர்களாகவும், ஓட்டல் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் தங்களது சொந்த மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களில் யாராவது வங்கி கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பற்றி உளவு பிரிவு போலீசாரும் கணக்கெடுத்து வருகிறார்கள். தங்களது பகுதியில் வசித்து வரும் வட மாநில வாலிபர்களை அந்தந்தப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொள்ளையர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.
கொள்ளையர்கள் பற்றி தகவல் கொடுப்பேருக்கு பரிசு வழங்கப்படும் என்று ,நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி அறிவித்துள்ளார். கொள்ளையர்களை பிடிக்க 9தனிப்படைபோலீசார் வெளிமாநிலம் சென்றுள்ளதாக ஆணையர் திரிபாதி கூறியுள்ளார்.
கண்காணிப்பு கேமிரா இல்லாத வங்கிகளில் உடனடியாக பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது பற்றி கமிஷனர் திரிபாதி தெரிவித்ததாவது:-பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் வங்கியில் பணிபுரிபவர்கள் குற்றவாளிகள் குறித்த தகவல்களை பின்வரும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலை பெற்றுக்கொள்வார். குற்றவாளிகளை குறித்த சரியான தகவல் அளிக்கும் நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானமாக வழங்கப்படும். அவர்களின் பெயர், விலாசம் மற்றும் விபரம் இரகசியமாக வைக்கப்படும்.தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் குற்றவாளிகளின் நிழற்படங்களை தொடர்ந்து வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொலைபேசி எண்கள்
98408 -14100, 99520 -91100
கொள்ளையர்கள் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வங்கி கிளைகளுக்கும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து நேரடி ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா வசதிகளை உடனடியாக ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாதாரண உடையிலும், சீருடையிலும் வங்கிகளில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
தைவான் விரைவில் சீனாவுடன் இணையும்: அதிபர் ஜின்பிங் உறுதி
02 Jan 2026பீஜிங், தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
-
கதை திருடப்பட்டதாக புகார்: ‘பராசக்தி’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
02 Jan 2026சென்னை, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
-
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு முதல்கட்டமாக வருகிற பிப்ரவரி மாதம் வீடுகள் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
02 Jan 2026வயநாடு, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக அடுத்த மாதம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக கேரள முதல்வர்
-
வைகோவுக்கு வயது 28-ஆ 82 வயதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆச்சரியம்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுக்கு இப்போது 82 வயதா? அல்லது 28 வயதா என்று எனக்கு சந்தேகம் வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை வழங்கினார் துணை ஜனாதிபதி
02 Jan 2026சென்னை, ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.
-
தவறாக புரிந்து கொள்வதை தடுக்க மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது முக்கியம்: ஜெய்சங்கர்
02 Jan 2026சென்னை, உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.
-
என் உடல்நிலை சீராகவே உள்ளது: ட்ரம்ப் விளக்கம்
02 Jan 2026வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உடல்நிலை பற்றி பல்வேறு விவாதங்களும் எழுந்துவரும் நிலையில்.
-
தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது
02 Jan 2026சென்னை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜன.2) சென்னையில் பவுனுக்கு ரூ.1,120 என உயர்ந்துள்ளது.
-
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமனம்
02 Jan 2026சென்னை, தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்:ஐ.நா. உடனடியாக தலையிட கொலம்பியா வலியுறுத்தல்
03 Jan 2026கராகஸ், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கொலம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட
-
வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
03 Jan 2026புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.
-
வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Jan 2026நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


