முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபாகரனின் மகன் வீடியோவை வெளியிடும் சேனல் 4

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 13 - விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் மிக கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிடப் போவதாக லண்டனை சேர்ந்த சேனல் 4 டி.வி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவம், தமிழர்களின் உடல்களை மண்ணில் புதைத்து விட்டது. இது தொடர்பான புகைப்படங்களையும், ஆதாரங்களையும் வெளியிட்டு உலகையே நடுங்க வைத்தது சேனல் 4 நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனம் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயது பாலசந்திரன் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ ஐ.நா. மனித உரிமை கவுன்சில் முன்பு இலங்கையை வெட்கி தலைகுனிந்து நிற்க வைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த வீடியோ 2009 ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மிக மிக நெருக்கத்தில் வைத்து பாலசந்திரனை கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். பாலசந்திரனை காக்க இருந்த 5 பேர்களையும் இவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். பாலசந்திரனின் உடலை சுற்றி அந்த 5 பேரின் உடல்களும் கிடந்தன. எந்த உடைகளிலும் ஆடைகள் இல்லை. இந்த புதிய வீடியோ குறித்த செய்தியை லண்டனின் இன்டிபென்டன்ட் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த புதிய செய்தி தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் வழக்கம் போல் இந்த வீடியோ போலியானது என்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்