முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை கிளப்பிய முலாயம்-லாலு

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.26 - பாராளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை முலாயம் சிங் யாதவும் லாலு பிரசாத் யாவும் மீண்டும் கிளப்பினர். பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும் எழுந்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பிரச்சினையை கிளப்பினார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

மக்கள் தொகை கணக்கெடுக்கும் செயல் திட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் கூறினர்.

அப்போது அவை முன்னவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி எழுந்து உறுப்பினர்களின் ஆலோசனைகளை அரசு பெற்றுள்ளது என்றும் இது தொடர்பாக அரசு  விரைவில் பரிசீலனை செய்யும் என்றும் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்