எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 11 - வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மிக அதிக அளவில் பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். அங்குள்ள பசுமையான சூழல் கோடை வெய்யிலையே சொர்க்கமாக்கும் அளவிற்கு இதமானதாக இருப்பதால் பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதுப் பற்றிய விவரம் வருமாறு:-
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், சுட்டெரிக்கும் வெய்யிலால் தகித்துக்கொண்டிருக்கிறது. வெப்பத்தைக் கக்கியபடி வீசும் அனல் காற்றாலும், சுட்டெரிக்கும் வெய்யிலாலும் மக்கள் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் கத்தரியும், அக்னி நட்சத்திரமும் நம்மை மிரட்ட வரப்போகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் துன்பம் பட நேரிடும். மக்கள் இப்போதே இந்த வெய்யில் கொடுமையிலிருந்து விடுபட கடற்கரை, பூங்கா, போன்ற இடங்களை தேடிச் செல்கின்றனர். அண்மைக்காலமாக வண்டலூர் வன உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் 7 லட்சத்து 11 ஆயிரத்து 589 என்ற நிலையிலிருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 20 லட்சத்து 2 ஆயிரத்து 545 என்று உயர்ந்திருக்கிறது. உயிரியல் பூங்கா நிர்வாகமும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை அளித்து வருகிறது. மேலும் அங்குள்ள வனவிலங்குகளுக்கும் புத்தாக்கப்பயிற்சிகளை அளித்து வருவதால் அவைகளும், உற்சாகத்துடன் காணப்படுகின்றன. இதனால் பார்வையாளர்கள் பெரிதும் கவரப்படுகின்றனர்.
சிங்கவால் குரங்கு ஒருங்கிணைந்த இனப்பெருக்கத் திட்டத்தின் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் செல்லாத இரண்டு புதிய மறைவிட இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் இனப்பெருக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் பூங்காவில் பிறந்த இளம் வரவுகளின் பட்டியல் கீழ்வருமாறு:
நீலகிரி கருங்குரங்கு - 1, சிங்கவால் குரங்கு -3, காட்டுமாடு -3, சிங்கம் -4, வெள்ளைப்புலி -2, நைல் நீர் யானை -1, முள்ளம் பன்றி -4, மர நாய் -4, புருவ கொம்பு மான் -1, காட்டாடு -1, வராக மான் -3, கட மான் -2, தீக்கோழி -2, செந்நிறக் காட்டுக்கோழி -2, மயில் -2, வெள்ளை மயில் -2, செந்தலைக் கிளி -2, வக்கா -18, சிறுகொக்கு -10, இந்திய மலைபாம்பு -34, மற்றும் கட்ட உடல் மலைப்பாம்பு -15.
விலங்குகளை கோடைக்காலங்களில் அதிக வெப்பத்திலிருந்து காப்பாற்றுவது இப்பூங்காவின் முக்கியமானதெரு செயலாகும்.
மானின இருப்பிடங்களில் பனை ஓலையால் வேயப்பட்ட புதிய கொட்டகைகள். பூங்காவிலுள்ள 7யானைகளுக்கு தினந்தோறும் பூங்குளியல் மற்றும் சேற்றுக் குளியல்.
தீக்கோழி ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, பறவைப் பகுதிகள் மற்றும் உட்சென்று காணும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் தானியங்கி நீர்தெளிப்பான்.
ஊர்வன இல்லத்தில் பாம்புகள் தங்களின் உடல் வெப்பநிலையை செய்யும் வகையில் இரண்டு மற்றும் மூன்றடுக்குகளில் பானை பதித்த மண்புற்றுகள்.
குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளின் உடல் வெப்பநிலையை தனிக்கும் பொருட்டு சிறப்பு உணவுகள்.
உட்சென்று காணும் பறவைகள் கூடம், தீக்கோழி, வெள்ளைப்புலி இருப்பிட உச்சியில் சூரிய ஒளி வெப்பத்தை தடை செய்யும் வகையில் நிழல் வலைகள்.
நவீன உயிரியல் பூங்காவின் நோக்கமானது வனவிலங்குகளை பூங்காக்களில் இனப்பெருக்கம் செய்து பாது காப்பதாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதன்முதலாக பூங்காவில் பிறந்த இந்திய மலைப்பாம்பு குட்டிகள் அதன்இயற்கை வாழிடமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உரிய வழிமுறைகளின் படிவிடப்பட்டுள்ளன.
விலங்குகளின் குணவியல்புகள் மாறாமலிருக்க அவற்றுக்கு இயற்கை குணங்களை வலிவூட்டும் சிறுகரடி, வெள்ளைப்புலி, சிங்கவால் குரங்கு மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு தரப்படுகின்றன. கரடிகள் சொட்டும் தேனை சுவைப்பதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் உபகரணங்களும் விலங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் பார்வையாளர்கள் அதிகம் ரசிக்கும் இடங்களில் மான்கள் உலாவிடமும் ஒன்று. மான்கள் உலாவிடத்தில் உள்ள அரைவட்ட தண்ணீர் தடுப்பணைகளில் பழ வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது அங்குள்ள குளம் அதிக மழை நீரை சேகரிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டு தானியங்கி நீர் தெளிப்பான் மூலம் அவை வளர்க்கப்படுகின்றன.
வனங்களில் தாயைப்பிரிந்து வரும் யானை தாயை விட்டு பிரியும் குட்டிகளை அதன் தாயுடன் சேர்க்க முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் அக்குட்டிகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கை வளர்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் யானைக்குட்டிகளுக்கு பிற யானைகளுடன் பார்வையில் தொடர்பு கொள்ளல், விளையாட்டு சாதனங்கள், உணவூட்டும் வழிமுறைகள் மற்றும் கால்நடை விலங்கின மருத்துவம் ஆகியவற்றால் மிகவும் நன்முறையில் பராமரிக்கப்படுகின்றன. இவ்வருட வரவான முரளி மற்றும் அசோகன் ஆகிய யானைக் குட்டிகளுடன் 6 யானைக் குட்டிகள் பல்வேறு நிலைகளில் இங்கு வந்து மறுவாழ்வு பெற்று வளர்கின்றன.
இப்பூங்கா பொது மக்களிடம் விலங்குகளின் மேல் பற்று, பாசம், அன்பு இவற்றை உருவாக்கும் வகையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரை இத்திட்டத்தின் கீழ் 113 விலங்குகள் 92 நபர்களால் ரூபாய் 38.7 லட்சம் பெறப்பட்டுள்ளது.
பூங்காவிலுள்ள தாவர உண்ணிகளுக்கு புதிதான பசும்புல் கொடுக்க கோ 3, கோ4, பாராகிராஸ் கரும்பு, சோளம், வாழை ஆகியவை நடப்ப்டடு தினமும் 2000 கிலோகிராம் புதிதான பசும்புல் பெறப்படுகிறது.
பூங்காவிற்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க புதிய 100 கே.வி. டீசல் மின்னாக்கி மற்றும் அதன் உபகரணங்களுடன் தானாகவே இயங்கும் மாற்றிகள் பொருத்தப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பூங்கா நுழைவு வாயில் மேம்பாட்டு பணிக்காக அரசின் சுற்றுலாத்துறையில் வழங்கப்பட்ட 3.25 கோடி மேம்பாட்டு பணிக்காக செலவிடப்பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அளவில் இவ்வளவு சிற்பபான அம்சங்கள் கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மக்களுக்கு தெரியாத வண்ணம் இதுவரை அமைந்திருந்தது. அதனால் மக்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து மக்களின் பார்வைக்கும் அடையாள சின்னமாகவும் திகழ்வதற்கு தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் முகப்புத்தோற்ற பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முகப்புபணிகளில் செய்யப்பட்ட முக்கிய அம்சங்களாவன.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனால் துவக்கி வைக்கப்பட்ட குகையுடன் கூடிய மலை அமைப்பு கொண்ட நுழைவாயிலுக்கு ஏற்றவாறு குறைந்த உயரத்தில் அரைவட்ட வடித்தில் 20 அதி நவீன தனித்தனி நுழைவுச்சீட்டு வழங்கும் இயந்திரங்களுடன் 2 நுழைவுச்சீட்டு மையங்கள் கருங்கல் மற்றும் பளிங்கு கற்களினால் ஒளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
கலையரங்கம், செயல் விளக்க அறை, பூங்கா நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடம் ஆகியவற்றில் ஓடுகள் பதிக்கப்பட்டு சாலைகள் சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு கோடை வெய்யில் கூட சொர்க்கமாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.