முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைஆதீனம்-நித்தியானந்தா திருஞானசம்பந்தர் பூஜையில் கலந்துகொண்டனர்

புதன்கிழமை, 6 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஜூன்- 6 - மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் நேற்று நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் மற்றும் இளைய ஆதீனம் நித்தியானந்தா கலந்து கொண்டனர்.    மதுரை ஆதீனமடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. பல அமைப்புக்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நித்தியானந்தாவை அர்த்தமண்டபத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த நித்தியானந்தா மீனாட்சிஅம்மன்கோவிலில் மதுரை ஆதீனத்திற்கு கொடுக்கப்படும் மரியாதை அனைத்தையும் இளையஆதீனமான தனக்கும் கொடுக்க வேண்டும் இல்லையேல் இது குறித்து வழக்கு தொடரப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கிடையில் ஆதீனமடத்தில் நடைபெறும் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் ஆதீன மீட்பு குழுவினரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஆர்டிஓவிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. திருஞானசம்பந்தர் ஊர்வலம் வரும் போது தரிசனம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.   நேற்றுகாலை திருஞானசம்பந்தர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவந்தார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் நித்தியானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்