எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஏப்.1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறது. இந்த குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
மத்திய தொலைதூர தகவல் துறையாக தயாநிதிமாறன் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் சில விதிமுறைகளை மாற்றினார். அவருக்கு பின்னால் மத்திய தொலைதூரதகவல் துறை அமைச்சர் பதவியை ஏற்ற தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, அந்த விதிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தி முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தார். அதுவும் அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டதோடு, வெறும் பெயர் அளவில் இருக்கும் சில தகவல் தொடர்பு கம்பெனிகளுக்கும் ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு ரூ. 3 ஆயிரம் கோடி வரை ஆ.ராசா,லஞ்சம் பெற்றுள்ளார். இந்த பணத்தை அவர், தனது மனைவி பெயரில் துபாய் போன்ற அரபு நாடுகளில் உள்ள வங்கி கணக்குகளிலும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மூலம் முதலீடும் செய்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.விசாரித்து கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் அறிக்கையை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டது. இந்த கிடுக்கிப்பிடியால் சி.பி.யை. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஆ.ராசாவின் வீடுகள், பினாமி பெயரில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களில் முதலில் சோதனை நடத்தியது. அதனையடுத்து ராசாவை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தது. விசாரணையில் ஆ.ராசா மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் அவரை கைது செய்தது. பின்னர் அவரிடம் 14 நாட்கள் விசாரணைக்கு பிறகு டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. மேலும் பிரபல அரசியல் பெண் தரகர் நீராராடியா, ராசாவின் பினாமி சாதிக்பாட்ஷா( இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது) ராசாவின் தனிச்செயலாலர் சந்தோலியா, தொலைதூர தகவல்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா, ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு வாங்கிய ஸ்வான் கம்பெனி நிர்வாக அதிகாரி பால்வா, முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், மனைவி கனிமொழி,(இவர்கள் இருவரும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களாக உள்ளனர்) பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, அகர்வாலு ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர் கனிமொழி, தயாளு அம்மாளை தவிர அனைவரையும் கைது செய்து காவலில் வைத்து சி.பி.ஐ.விசாரித்து வருகிறது. கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரத்தில் ஆசிப் பல்வாவுக்கும் அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை நீண்டு கொண்டே போவதால் கடந்த 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அறிக்கையை சி.பி.ஐ.யால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி சுப்ரீம்கோட்டில் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆ.ராசா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைகேடு, லஞ்சம், மோசடி, போலி தஸ்தாவேஜூகள் தயாரித்தல் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துதல் பிரதமரின் அறிவுரையை மீறியது, மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து இருப்பதாகவும், இது நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.