எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.2 - இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கொள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் அடைந்த வேதனைகளையும்சென்னை பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பட்டியலிட்டார்.
மேலும், வன்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் ரவுடிகளாக உள்ளதால், மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்தார். இதற்கு மாற்றம் காண, நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுமென்று பொதுமக்களை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்தார்.
நேற்று பகல் 2.15 மணியளவில் போயஸ் தோட்டத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதியோ தி.மு.க - அ.தி.மு.க. சாதனைகளை ஒப்பிட்டு, வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று நீதிநிலைநாட்டப்பட்டு, பாதுகாப்பு அளித்து, ரவடித்தனத்தை முற்றிலும் ஒழித்தேன். இன்று காவல் துறை ரவுடிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
சென்னை மாநகரம் கதிகலங்கி, அமைதியற்ற நகரமாகியுள்ளது. இன்றைய தி.மு.க. கவுன்சிலர்கள் பெருமளவில் ரவுடிகளாக உள்ளார்கள். இவர்கள் உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. வன்முறையின் மூலம் வெற்றிப்பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களால் நீங்கள்படும் வேதனையை அறிவேன்.
சட்ட கல்லூரி மாணவர்கள் மோதலில் போலீசார் வேடிக்கை பார்த்தது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழக காவல் துறை முன்னிலையில் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டனர்.
பத்திரிகை ஊழியர்கள் மூன்று பேர் பலியான சம்பவம், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நிறைய சட்ட ஒழுங்கு சீர்ழிவு அதிகம் அதற்கு, ஒருசில எடுத்துக்காட்டுதான் இது. சினிமாவில் வரும் வன்முறை காட்சி நிஜமாகவே நடக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்ழிந்து கொண்டிருக்கிறது.
அடுத்த பிரச்சனை மின்வெட்டு, எனது ஆட்சிக்காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மின்சாரம் சீராக வந்தது. உபரி மின்சாரம் பிறமாநிலங்களுக்கு விற்கப்பட்டு, வருவாய் லாபம் ஈட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு அமுலில் உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களிடம் கை ஏந்தவிட்டார் கருணாநிதி. தேவைக்கு அதிகமாக நிலகரியை இறக்குமதி செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார் கருணாநிதி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எனது ஆட்சிக்காலத்தில் கடத்தல், பதுக்கல் தடுக்கப்பட்டது. விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று விலை உயர்வால், மக்கள் செய்வது அறியாமல் திண்டாடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், கடந்த 5 ஆண்டுக்காலமாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறீர்கள். தமிழகம் எனது ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. மின்மிகை மாநிலமாக இருந்தது. புதிய வீரானம் திட்டம் மூலம் உங்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு வித்திட்டேன். குடிநீர் பிரச்சனையை தீர்த்து, உங்களது பிரச்சனைகளை தீர்த்தேன். எனது ஆட்சியோடு, கருணாநிதியின் ஆட்சியின் வேதனையை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்.
இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.
தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும்.
கருணாநிதிக்கு சொத்து குவிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துவிட்ட பி ன் உலக பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கருணாநிதி இருக்கிறார். தமிழக மக்களே நீங்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றபிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ரவுடிகளின் அட்டகாசத்தால் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் வாழ்கிறது. ஆறு கோடி குடும்பங்கள் வாழ தமிழக மக்கள் எம்.ஜிஆரின் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக 1 லட்சத்து 80 கோடி கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் இமாலய ஊழல் சாதனை புரிந்துள்ளார். இந்த பிரச்சனையால் சிறுபான்மையை சேர்ந்த சாதிக் பாஷா உயிர் பறிக்கப்பட்டது. தலித்தின ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் கருணாநிதி குடும்பம் ஊழல் இல்லை என்று மக்களை ஏமாற்றி சாதனை சாதனை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்களே. கடந்த 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனை வெளியேறு, போராட்டம் நடந்தது. இப்போது தமிழகத்தில் என் தலைமையில் கொல்லையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது. தேர்தல் நாள் அன்று ஜனநாயக கடமையாற்ற அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும். கருணாநிதி தமிழக மக்களை விரட்டி, தமிழகத்தை தன் குடும்பம் வசம் ஆக்கிவிட நீங்கள் விடாதீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் அவர்களை விரட்டி அடிக்கவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலஇந்திரா, அம்பத்தூர் வேட்பாளர் வேதாச்சலம், பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜா, மாதவரம் தொகுதி வேட்பாளர் மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தே.மு.தி.க. வேட்பாளர் சேகர், மதுரவாயல் பீமாராவ், வில்லிவாக்கம் வேட்பாளர் ஏ.சி.டி.பிபாகரன், எழும்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.