எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.2 - இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கொள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் அடைந்த வேதனைகளையும்சென்னை பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பட்டியலிட்டார்.
மேலும், வன்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் ரவுடிகளாக உள்ளதால், மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்தார். இதற்கு மாற்றம் காண, நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுமென்று பொதுமக்களை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்தார்.
நேற்று பகல் 2.15 மணியளவில் போயஸ் தோட்டத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதியோ தி.மு.க - அ.தி.மு.க. சாதனைகளை ஒப்பிட்டு, வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று நீதிநிலைநாட்டப்பட்டு, பாதுகாப்பு அளித்து, ரவடித்தனத்தை முற்றிலும் ஒழித்தேன். இன்று காவல் துறை ரவுடிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
சென்னை மாநகரம் கதிகலங்கி, அமைதியற்ற நகரமாகியுள்ளது. இன்றைய தி.மு.க. கவுன்சிலர்கள் பெருமளவில் ரவுடிகளாக உள்ளார்கள். இவர்கள் உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. வன்முறையின் மூலம் வெற்றிப்பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களால் நீங்கள்படும் வேதனையை அறிவேன்.
சட்ட கல்லூரி மாணவர்கள் மோதலில் போலீசார் வேடிக்கை பார்த்தது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழக காவல் துறை முன்னிலையில் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டனர்.
பத்திரிகை ஊழியர்கள் மூன்று பேர் பலியான சம்பவம், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நிறைய சட்ட ஒழுங்கு சீர்ழிவு அதிகம் அதற்கு, ஒருசில எடுத்துக்காட்டுதான் இது. சினிமாவில் வரும் வன்முறை காட்சி நிஜமாகவே நடக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்ழிந்து கொண்டிருக்கிறது.
அடுத்த பிரச்சனை மின்வெட்டு, எனது ஆட்சிக்காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மின்சாரம் சீராக வந்தது. உபரி மின்சாரம் பிறமாநிலங்களுக்கு விற்கப்பட்டு, வருவாய் லாபம் ஈட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு அமுலில் உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களிடம் கை ஏந்தவிட்டார் கருணாநிதி. தேவைக்கு அதிகமாக நிலகரியை இறக்குமதி செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார் கருணாநிதி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எனது ஆட்சிக்காலத்தில் கடத்தல், பதுக்கல் தடுக்கப்பட்டது. விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று விலை உயர்வால், மக்கள் செய்வது அறியாமல் திண்டாடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், கடந்த 5 ஆண்டுக்காலமாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறீர்கள். தமிழகம் எனது ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. மின்மிகை மாநிலமாக இருந்தது. புதிய வீரானம் திட்டம் மூலம் உங்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு வித்திட்டேன். குடிநீர் பிரச்சனையை தீர்த்து, உங்களது பிரச்சனைகளை தீர்த்தேன். எனது ஆட்சியோடு, கருணாநிதியின் ஆட்சியின் வேதனையை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்.
இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.
தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும்.
கருணாநிதிக்கு சொத்து குவிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துவிட்ட பி ன் உலக பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கருணாநிதி இருக்கிறார். தமிழக மக்களே நீங்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றபிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ரவுடிகளின் அட்டகாசத்தால் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் வாழ்கிறது. ஆறு கோடி குடும்பங்கள் வாழ தமிழக மக்கள் எம்.ஜிஆரின் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக 1 லட்சத்து 80 கோடி கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் இமாலய ஊழல் சாதனை புரிந்துள்ளார். இந்த பிரச்சனையால் சிறுபான்மையை சேர்ந்த சாதிக் பாஷா உயிர் பறிக்கப்பட்டது. தலித்தின ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் கருணாநிதி குடும்பம் ஊழல் இல்லை என்று மக்களை ஏமாற்றி சாதனை சாதனை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்களே. கடந்த 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனை வெளியேறு, போராட்டம் நடந்தது. இப்போது தமிழகத்தில் என் தலைமையில் கொல்லையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது. தேர்தல் நாள் அன்று ஜனநாயக கடமையாற்ற அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும். கருணாநிதி தமிழக மக்களை விரட்டி, தமிழகத்தை தன் குடும்பம் வசம் ஆக்கிவிட நீங்கள் விடாதீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் அவர்களை விரட்டி அடிக்கவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலஇந்திரா, அம்பத்தூர் வேட்பாளர் வேதாச்சலம், பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜா, மாதவரம் தொகுதி வேட்பாளர் மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தே.மு.தி.க. வேட்பாளர் சேகர், மதுரவாயல் பீமாராவ், வில்லிவாக்கம் வேட்பாளர் ஏ.சி.டி.பிபாகரன், எழும்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் முன்னாள் கவர்னர், 8 மத்திய அமைச்சர்கள், இரண்டு முன்னாள் முதல்வர்கள் போட்டி
18 Apr 2024சென்னை, இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் முன்னாள் கவர்னர், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.