எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.2 - இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கொள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் அடைந்த வேதனைகளையும்சென்னை பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பட்டியலிட்டார்.
மேலும், வன்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் ரவுடிகளாக உள்ளதால், மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்தார். இதற்கு மாற்றம் காண, நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுமென்று பொதுமக்களை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்தார்.
நேற்று பகல் 2.15 மணியளவில் போயஸ் தோட்டத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதியோ தி.மு.க - அ.தி.மு.க. சாதனைகளை ஒப்பிட்டு, வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று நீதிநிலைநாட்டப்பட்டு, பாதுகாப்பு அளித்து, ரவடித்தனத்தை முற்றிலும் ஒழித்தேன். இன்று காவல் துறை ரவுடிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
சென்னை மாநகரம் கதிகலங்கி, அமைதியற்ற நகரமாகியுள்ளது. இன்றைய தி.மு.க. கவுன்சிலர்கள் பெருமளவில் ரவுடிகளாக உள்ளார்கள். இவர்கள் உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. வன்முறையின் மூலம் வெற்றிப்பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களால் நீங்கள்படும் வேதனையை அறிவேன்.
சட்ட கல்லூரி மாணவர்கள் மோதலில் போலீசார் வேடிக்கை பார்த்தது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழக காவல் துறை முன்னிலையில் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டனர்.
பத்திரிகை ஊழியர்கள் மூன்று பேர் பலியான சம்பவம், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நிறைய சட்ட ஒழுங்கு சீர்ழிவு அதிகம் அதற்கு, ஒருசில எடுத்துக்காட்டுதான் இது. சினிமாவில் வரும் வன்முறை காட்சி நிஜமாகவே நடக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்ழிந்து கொண்டிருக்கிறது.
அடுத்த பிரச்சனை மின்வெட்டு, எனது ஆட்சிக்காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மின்சாரம் சீராக வந்தது. உபரி மின்சாரம் பிறமாநிலங்களுக்கு விற்கப்பட்டு, வருவாய் லாபம் ஈட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு அமுலில் உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களிடம் கை ஏந்தவிட்டார் கருணாநிதி. தேவைக்கு அதிகமாக நிலகரியை இறக்குமதி செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார் கருணாநிதி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எனது ஆட்சிக்காலத்தில் கடத்தல், பதுக்கல் தடுக்கப்பட்டது. விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று விலை உயர்வால், மக்கள் செய்வது அறியாமல் திண்டாடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், கடந்த 5 ஆண்டுக்காலமாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறீர்கள். தமிழகம் எனது ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. மின்மிகை மாநிலமாக இருந்தது. புதிய வீரானம் திட்டம் மூலம் உங்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு வித்திட்டேன். குடிநீர் பிரச்சனையை தீர்த்து, உங்களது பிரச்சனைகளை தீர்த்தேன். எனது ஆட்சியோடு, கருணாநிதியின் ஆட்சியின் வேதனையை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்.
இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.
தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும்.
கருணாநிதிக்கு சொத்து குவிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துவிட்ட பி ன் உலக பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கருணாநிதி இருக்கிறார். தமிழக மக்களே நீங்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றபிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ரவுடிகளின் அட்டகாசத்தால் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் வாழ்கிறது. ஆறு கோடி குடும்பங்கள் வாழ தமிழக மக்கள் எம்.ஜிஆரின் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக 1 லட்சத்து 80 கோடி கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் இமாலய ஊழல் சாதனை புரிந்துள்ளார். இந்த பிரச்சனையால் சிறுபான்மையை சேர்ந்த சாதிக் பாஷா உயிர் பறிக்கப்பட்டது. தலித்தின ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் கருணாநிதி குடும்பம் ஊழல் இல்லை என்று மக்களை ஏமாற்றி சாதனை சாதனை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்களே. கடந்த 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனை வெளியேறு, போராட்டம் நடந்தது. இப்போது தமிழகத்தில் என் தலைமையில் கொல்லையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது. தேர்தல் நாள் அன்று ஜனநாயக கடமையாற்ற அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும். கருணாநிதி தமிழக மக்களை விரட்டி, தமிழகத்தை தன் குடும்பம் வசம் ஆக்கிவிட நீங்கள் விடாதீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் அவர்களை விரட்டி அடிக்கவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலஇந்திரா, அம்பத்தூர் வேட்பாளர் வேதாச்சலம், பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜா, மாதவரம் தொகுதி வேட்பாளர் மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தே.மு.தி.க. வேட்பாளர் சேகர், மதுரவாயல் பீமாராவ், வில்லிவாக்கம் வேட்பாளர் ஏ.சி.டி.பிபாகரன், எழும்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரண்: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
16 Oct 2025ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை
16 Oct 2025புதுடெல்லி: பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வந்தார்.
-
மெஸ்ஸியின் இந்திய பயணம் ரத்து?
16 Oct 2025திருவனந்தபுரம்: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மெக்சிகோவில் புயலுக்கு 130 பேர் பலி
16 Oct 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
16 Oct 2025ஜகர்த்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
லைகா தொடர்ந்த வழக்கு: விஷால் பதிலளிக்க உத்தரவு
16 Oct 2025சென்னை: லைகா தொடர்ந்த வழக்கு விஷால் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
-
கிட்னி திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 Oct 2025சென்னை: கிட்னி திருட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்க வேண்டும் என்று இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.