முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத்திற்கு மேலும் 3,199 யாத்தீரிகர்கள் பயணம்

சனிக்கிழமை, 14 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு,ஜூலை.14 - அமர்நாத் கோயிலில் வழிபட நேற்று மேலும் 3 ஆயிரத்து 199 யாத்திரீர்கள் புறப்பட்டு சென்றனர். இமயமலையில் சுமார் 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக அமைந்த பனி லிங்கத்தை வழிபட கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவை சுமார் 20 ஆயிரம் யாத்திரீகர்கள் சென்று வழிபட்டுள்ளனர். நேற்றும் 3 ஆயிரத்து 199 பேர் யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். இவர்கள் ஜம்மு நகரில் உள்ள பகவதிநகர் முகாமில் இருந்து புறப்பட்டு சென்றனர். இவர்களில் 2 ஆயிரத்து 122 ஆண்கள், 747 பெண்கள், 250 சாதுக்கள் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்