எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஏப்.3 - ஊழல் கலெக்டர்தான் எங்களுக்கு வேண்டும். நேர்மையான கலெக்டர் வேண்டாம் என்று தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள். மதுரை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, நேர்மையான கலெக்டராக கருதப்படும் சகாயத்தை பொய்ப் புகார் கொடுத்து மாற்றவும், தி.மு.க.வினர் சதித்திட்டம் தீட்டி செயல்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்துராமலிங்கமும், தி.மு.க. வேட்பாளராக லதா அதியமானும் களமிறக்கப்பட்டார்கள். திருமங்கலம் என்றாலே மக்களுக்கு இன்றைக்கும் நினைவுக்கு வருவது பணமழைதான். காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அங்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. திருமங்கலம் மக்களுக்கு சுக்கிர திசையோ என்று நினைக்கும் அளவிற்கு அங்கு பணபலம் விளையாடியது. வாக்காளர்களுக்கு ரூ. 5000 முதல் 10,000 வரை தி.மு.க.வினரால் கொடுக்கப்பட்டதாக இன்றளவும் சொல்லப்படுகிறது. பணம் மட்டுமல்ல, செல்போன், வேஷ்டி சேலைகள், பழனி பஞ்சாமிர்தம், இன்னும் சொல்லப்போனால் தங்கக் காசுவரைகூட கொடுத்ததாக இப்போதும் மக்கள் சொல்கிறார்கள். திருமங்கலம் பார்முலா என்று பெயர் சூட்டும் அளவுக்கு அந்த இடைத் தேர்தல் மக்களிடம் பிரபலமானது.
இவ்வாறு மக்களுக்கு அப்போது பணம் கொடுக்கப்பட்டதில் தற்போதைய மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளமே சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த திருமங்கலம் பார்முலா அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் பின்பற்றப்பட்டது. இந்த மோசமான நடைமுறை ஏப்ரல் 13 ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படலாம் என்று சிந்தித்த தேர்தல் கமிஷன், இந்த மோசமான பழக்கத்திற்கு செக் வைக்க முடிவெடுத்தது. அதன் எதிரொலிதான் தற்போது நடந்துவரும் அதிரடி வாகனச் சோதனைகள். தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த வாகன சோதனைகள் மூலம் ரூ. 25 கோடிவரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரே கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக கடத்தப்பட்ட வேட்டிகள், சேலைகள், மப்ளர்கள்கூட கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளால் மிரண்டுபோன தி.மு.க.வினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ வாகனச் சோதனைகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அப்படியிருந்தும்கூட தி.மு.க.வினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் போலீஸ் வாகனங்களில் கூட பணத்தை கடத்தி மக்களுக்கு கொடுப்பதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையமும் விடுவதாக இல்லை. தி.மு.க.வினர் செல்லும் வாகனங்களை துரத்தி துரத்தி அடிக்கிறது தேர்தல் கமிஷன். இதனால் பல இடங்களில் பணம் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் தி.மு.க.வினர். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க இவர்களுக்கு துப்பில்லை. துட்டை கொடுத்துத்தான் ஓட்டு வாங்க வேண்டும் என்பதுதான் இவர்களது அவல நிலையாக உள்ளது. காரணம் கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான் காசு கொடுத்தால்தான் ஓட்டு வாங்க முடியும் என்ற முடிவுக்கே தி.மு.க.வினர் வந்துவிட்டனர்.
ஆனால் தேர்தல் கமிஷனோ அதற்கு செக் வைக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அழகிரி வீட்டில் போடப்பட்டிருந்த லோக்கல் போலீசார் மாற்றப்பட்டு மத்திய போலீஸ் படை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஊழல் கலெக்டராக செயல்பட்ட காமராஜ், அதிரடியாக மாற்றப்பட்டார். கிரானைட் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கலெக்டர் இவர்.
இவருக்கு பதிலாக சகாயம் என்கிற நேர்மையான கலெக்டர் தேர்தல் கமிஷனால் மதுரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மையான அதிகாரிகளைத்தான் தி.மு.க.வினருக்கு பிடிக்காதே. சகாயம் வந்தது முதல் இவர்களது ஜம்பம் பலிக்கவில்லை. தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் நன்கு கவனித்து அதைத் தடுத்துவருகிறது. இதனால் மிரண்டுபோன தி.மு.க.வினர் நேர்மையான கலெக்டர் சகாயத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டார்கள். மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) இருப்பவர் சுகுமாறன். இவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். புகாரின் சுகுமாறன் கூறியிருப்பதாவது:-
மத்திய அமைச்சராக இருக்கும் அழகிரி மீதும், மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான மூர்த்தி மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து அதுவும் கைதாகும் அளவுக்கு வழக்கு பதிவு செய்யுமாறு மதுரை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயம் என்னை வற்புறுத்துகிறார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. எனவே என்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். மனுவை அனுப்பிய கையோடு வடமலையான் மருத்துவமனையிலும் இவர் அட்மிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்.டி.ஓ.வின் இந்த புகார் ஒரு பொய்ப் புகார் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் செல்லூர் ராஜு.
மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் செல்லூர் ராஜு. இவர் இந்த புகார் பற்றி கூறியதாவது:-
ஆர்.டி.ஓ. சுகுமாறன் தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த விரும்பும் கலெக்டர் சகாயத்தை மாற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுகுமாறனின் புகார் பொய்யானது. தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும். அதற்கு இதுபோன்ற நேர்மையான கலெக்டர் தான் தேவை. எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆர்.டி.ஓ. சுகுமாறனின் புகார் ஒரு பொய்ப் புகார் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பொய்ப் புகார் கொடுப்பது தி.மு.க.வினருக்கு கைவந்த கலை. பொய்வழக்குபோடுவதும் இவர்களுக்கு கைவந்த கலை. கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி ஆசிரியர் மணிமாறன் அவர்களை தி.மு.க. அரசு கடந்த ஜூலை மாதம் கைது செய்தது. ஆனால் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் நடத்திய ஆர்பாட்டத்தை அடுத்து அவர் 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும்கூட தி.மு.க. அரசு அவர்மீது 5 பொய் வழக்குகளை புனைந்தது. கிரானைட் ஊழல் பற்றி புகார் கொடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி ஆசிரியரையே தி.மு.க. அரசு கைது செய்ததோடு பொய்வழக்குகளையும் போட்டது. அப்படிப்பட்ட இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு வளைந்துகொடுக்கவில்லை என்பதற்காக கலெக்டரை மாற்ற நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே? ஆக இவர்களுக்கு ஊழல் கலெக்டர்தான் வேண்டும். நேர்மையான கலெக்டர்கள் இருக்கக் கூடாது. இதுதான் தி.மு.க.வினரின் தாரக மந்திரம். இதை பொதுமக்கள் புரிந்துகொண்டால் சரி.
கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சியில் மதுரை கலெக்டராக பணியாற்ற தகுதிகள்
கீழ்கண்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிய முடியும்.
1. மு.க.அழகிரிக்கு ஜால்ரா போடவேண்டும். எடுபிடியாகவும் இருக்க வேண்டும்.
2. வாக்காளர்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததை போல தற்போதும் வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுப்பதை தடுக்க கூடாது.
3. போலீஸ் வேன்கள், 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் ஆகிய வண்டிகளில் பணத்தை கடந்த தி.மு.க.வினரை அனுமதிக்க வேண்டும்.
4. கிரானைட் கொள்ளை மூலம் தி.மு.க.வுக்கு
பெரும் பங்கு வருவதால் கிரானைட் கொள்ளை சம்பந்தமாக புகார் வந்தால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த புகாரை குப்பை தொட்டியில் போட்டுவிட வேண்டும். அரசு சொத்தை கொள்ளை அடிக்கும் கிரானைட் கொள்ளையர்களை பாதுகாக்க வேண்டும்.
5. தி.மு.க. செய்யும் அனைத்து ஊழல்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சியில் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிய முடியும். இந்த தகுதிகள் இல்லாத கலெக்டரை மு.க.அழகிரிக்கு பிடிக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.