முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட கலெக்டரை மாற்ற தி.மு.க.வினர் சதி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை, ஏப்.3 - ஊழல் கலெக்டர்தான் எங்களுக்கு வேண்டும். நேர்மையான கலெக்டர் வேண்டாம் என்று தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள். மதுரை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, நேர்மையான கலெக்டராக கருதப்படும் சகாயத்தை பொய்ப் புகார் கொடுத்து மாற்றவும், தி.மு.க.வினர் சதித்திட்டம் தீட்டி செயல்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்துராமலிங்கமும், தி.மு.க. வேட்பாளராக லதா அதியமானும் களமிறக்கப்பட்டார்கள். திருமங்கலம் என்றாலே மக்களுக்கு இன்றைக்கும் நினைவுக்கு வருவது பணமழைதான். காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அங்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. திருமங்கலம் மக்களுக்கு சுக்கிர திசையோ என்று நினைக்கும் அளவிற்கு அங்கு பணபலம் விளையாடியது. வாக்காளர்களுக்கு ரூ. 5000 முதல் 10,000 வரை தி.மு.க.வினரால் கொடுக்கப்பட்டதாக இன்றளவும் சொல்லப்படுகிறது. பணம் மட்டுமல்ல, செல்போன், வேஷ்டி சேலைகள், பழனி பஞ்சாமிர்தம், இன்னும் சொல்லப்போனால் தங்கக் காசுவரைகூட கொடுத்ததாக இப்போதும் மக்கள் சொல்கிறார்கள். திருமங்கலம் பார்முலா என்று பெயர் சூட்டும் அளவுக்கு அந்த இடைத் தேர்தல் மக்களிடம் பிரபலமானது. 

இவ்வாறு மக்களுக்கு அப்போது பணம் கொடுக்கப்பட்டதில் தற்போதைய மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளமே சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த திருமங்கலம் பார்முலா அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் பின்பற்றப்பட்டது. இந்த மோசமான நடைமுறை ஏப்ரல் 13 ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படலாம் என்று சிந்தித்த தேர்தல் கமிஷன், இந்த மோசமான பழக்கத்திற்கு செக் வைக்க முடிவெடுத்தது. அதன் எதிரொலிதான் தற்போது நடந்துவரும் அதிரடி வாகனச் சோதனைகள். தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த வாகன சோதனைகள் மூலம் ரூ. 25 கோடிவரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரே கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக கடத்தப்பட்ட வேட்டிகள், சேலைகள், மப்ளர்கள்கூட கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளால் மிரண்டுபோன தி.மு.க.வினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ வாகனச் சோதனைகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அப்படியிருந்தும்கூட தி.மு.க.வினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் போலீஸ் வாகனங்களில் கூட பணத்தை கடத்தி மக்களுக்கு கொடுப்பதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையமும் விடுவதாக இல்லை. தி.மு.க.வினர் செல்லும் வாகனங்களை துரத்தி துரத்தி அடிக்கிறது தேர்தல் கமிஷன். இதனால் பல இடங்களில் பணம் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் தி.மு.க.வினர். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க இவர்களுக்கு துப்பில்லை. துட்டை கொடுத்துத்தான் ஓட்டு வாங்க வேண்டும் என்பதுதான் இவர்களது அவல நிலையாக உள்ளது. காரணம் கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான் காசு கொடுத்தால்தான் ஓட்டு வாங்க முடியும் என்ற முடிவுக்கே தி.மு.க.வினர் வந்துவிட்டனர். 

ஆனால் தேர்தல் கமிஷனோ அதற்கு செக் வைக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அழகிரி வீட்டில் போடப்பட்டிருந்த லோக்கல் போலீசார் மாற்றப்பட்டு மத்திய போலீஸ் படை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஊழல் கலெக்டராக செயல்பட்ட காமராஜ், அதிரடியாக மாற்றப்பட்டார். கிரானைட் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கலெக்டர் இவர். 

இவருக்கு பதிலாக சகாயம் என்கிற நேர்மையான கலெக்டர் தேர்தல் கமிஷனால் மதுரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மையான அதிகாரிகளைத்தான் தி.மு.க.வினருக்கு பிடிக்காதே. சகாயம் வந்தது முதல் இவர்களது ஜம்பம் பலிக்கவில்லை. தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் நன்கு கவனித்து அதைத் தடுத்துவருகிறது. இதனால் மிரண்டுபோன தி.மு.க.வினர்  நேர்மையான கலெக்டர் சகாயத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டார்கள். மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) இருப்பவர் சுகுமாறன்.  இவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். புகாரின் சுகுமாறன் கூறியிருப்பதாவது:-

மத்திய அமைச்சராக இருக்கும் அழகிரி மீதும், மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான மூர்த்தி மீதும்  தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து அதுவும் கைதாகும் அளவுக்கு வழக்கு பதிவு செய்யுமாறு மதுரை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயம் என்னை வற்புறுத்துகிறார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. எனவே என்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில்  அவர் கூறியுள்ளார். மனுவை அனுப்பிய கையோடு வடமலையான் மருத்துவமனையிலும் இவர் அட்மிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்.டி.ஓ.வின் இந்த புகார் ஒரு பொய்ப் புகார் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் செல்லூர் ராஜு.

மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் செல்லூர் ராஜு. இவர் இந்த புகார் பற்றி கூறியதாவது:-

ஆர்.டி.ஓ. சுகுமாறன் தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த விரும்பும் கலெக்டர் சகாயத்தை மாற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுகுமாறனின் புகார் பொய்யானது. தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும். அதற்கு இதுபோன்ற நேர்மையான கலெக்டர் தான் தேவை.  எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். 

இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆர்.டி.ஓ. சுகுமாறனின் புகார் ஒரு பொய்ப் புகார் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பொய்ப் புகார் கொடுப்பது தி.மு.க.வினருக்கு கைவந்த கலை. பொய்வழக்குபோடுவதும் இவர்களுக்கு கைவந்த கலை. கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி ஆசிரியர் மணிமாறன் அவர்களை தி.மு.க. அரசு கடந்த ஜூலை மாதம் கைது செய்தது. ஆனால் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் நடத்திய ஆர்பாட்டத்தை அடுத்து அவர் 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும்கூட தி.மு.க. அரசு அவர்மீது 5  பொய் வழக்குகளை புனைந்தது. கிரானைட் ஊழல் பற்றி புகார் கொடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி ஆசிரியரையே தி.மு.க. அரசு கைது செய்ததோடு பொய்வழக்குகளையும் போட்டது. அப்படிப்பட்ட இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு வளைந்துகொடுக்கவில்லை என்பதற்காக கலெக்டரை மாற்ற நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே? ஆக இவர்களுக்கு ஊழல் கலெக்டர்தான் வேண்டும். நேர்மையான கலெக்டர்கள் இருக்கக் கூடாது. இதுதான் தி.மு.க.வினரின் தாரக மந்திரம். இதை பொதுமக்கள் புரிந்துகொண்டால் சரி.

 

கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சியில் மதுரை கலெக்டராக பணியாற்ற தகுதிகள்

 

கீழ்கண்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிய முடியும்.

 

1. மு.க.அழகிரிக்கு ஜால்ரா போடவேண்டும். எடுபிடியாகவும் இருக்க வேண்டும்.

 

2. வாக்காளர்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததை போல தற்போதும் வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுப்பதை தடுக்க கூடாது.

 

3. போலீஸ் வேன்கள், 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் ஆகிய வண்டிகளில் பணத்தை கடந்த தி.மு.க.வினரை அனுமதிக்க வேண்டும்.

 

4. கிரானைட் கொள்ளை மூலம் தி.மு.க.வுக்கு

பெரும் பங்கு வருவதால் கிரானைட் கொள்ளை சம்பந்தமாக புகார் வந்தால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த புகாரை குப்பை தொட்டியில் போட்டுவிட வேண்டும். அரசு சொத்தை கொள்ளை அடிக்கும் கிரானைட் கொள்ளையர்களை பாதுகாக்க வேண்டும்.

 

5. தி.மு.க. செய்யும் அனைத்து ஊழல்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சியில் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிய முடியும். இந்த தகுதிகள் இல்லாத கலெக்டரை மு.க.அழகிரிக்கு பிடிக்காது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago