எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 4 - தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு மதுரை கலெக்டருக்கு எதிராக பொய் புகார் கொடுத்த கோட்டாட்சியரை அதிரடியாக தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்துள்ளது. இதேபோல், மதுரையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட உளவு பிரிவு உதவி கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் குத்துவெட்டுக்கள் காரணமாக பிரச்சாரம் செய்வதிலும், வேட்பாளர் பெயர் அறிவிப்பதிலும், ஏகப்பட்ட குளறுபடி காரணமாக தாமதமாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். மறுபுறம் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாகாமல் தடுப்பதற்காக உளவு பிரிவு முதல் பல்வேறு பொய் பிரச்சாரங்களை தி.மு.க. பயன்படுத்தியது. இவை அனைத்தையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றிகரமாக அமைந்து கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கினறனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் இடைத்தேர்தல், ஜனநாயகத்திற்கு சவால் விடப்பட்டு வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடந்த தேர்தல் இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தி.மு.க.வினர் காங்கிரஸ் உதவியோடு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த காரணத்தினால் அராஜகமான தேர்தல்களை நடத்தி குறுக்கு வழியில் வெற்றியும் பெற்றனர்.
தமிழகத்தின் நேர்மையான தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா தேர்தலில் தில்லுமுள்ளு செய்த தி.மு.க.வினர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்தபொழுது கருணாநிதி தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை பகீரங்கமாக மிரட்டும் சம்பவமும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தை நீதிமன்றமே கண்டிக்கும் அவல நிலையும் நடந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.வினர் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அனைத்து மட்டங்களிலும் நடந்தது. காவல் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கருணாநிதி குடும்பத்தின் கடைக்கோடி உறவினர்களுக்குக்கூட பயந்து சலாம் போடும் நிலை இருந்தது. தென் மாவட்டங்களில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் சிற்றரசர் போல் அழகிரி வலம்வந்தார். தேர்தலில் தில்லுமுல்லு செய்து வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணத்தை லஞ்சமாக கொடுத்து வாக்குகளை கைப்பற்றும் திட்டத்திற்கு ``அழகிரி பார்முலா'' என்று தி.மு.க.வினர் பெருமையாக சொல்லிக்கொண்டனர்.
இந்த தேர்தலில் இத்தகைய நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதலே தமிழக சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டிய தேர்தல் ஆணையம் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய முறைகள், தவிர்க்கவேண்டிய முறைகள், நேர்மையாக தேர்தல் நடத்த ஒத்துழைக்கும் படி அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டது. அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.
தி.மு.க.வினர் வழக்கம்போல் காவல்துறை, கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் நமக்கு சாதமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தெம்பாக தங்களுடைய திருமங்கலம் பார்முலாவை அமுல் படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். அதற்கு வசதியாக தமிழக டிஜிபி, உளவுப்பிரிவு தலைவர், தமக்கு வேண்டிய மாவட்ட கலெக்டர்களை பயன்படுத்தவும் செய்தனர். இது பற்றி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். காவல் துறை தலைவர், உளவுப்பிரிவு தலைவர், குறிப்பிட்ட கலெக்டர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்தனர். அந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அதிரடியாக காவல்துறை டிஜிபி, உளவுபிரிவு தலைவர், பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை மாற்றியது. அப்படி மாற்றியதில் முக்கியமான மாற்றமாக அழகிரிக்கு ஜதகமாக செயல்பட்டு வந்த கிரானைட் ஊழல் பற்றி துளியும் கண்டுகொள்ளாத மதுரை கலெக்டர் காமராஜ் மற்றும் காவல்துறை ஆணையர் பாரி ஆகியோரும் அடங்குவர். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் கடுமையான வாகனச்சோதனைகளை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பிடித்தது.
இந்த நடவடிக்கைகளால் மிரண்டு போன கருணாநிதி குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்தார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் ஜெயிக்க வைப்பதற்கு ஆணையம் துணை போவதாக அறிக்கை விட்டார். தமிழகத்தில் மெர்ஜென்சி நிலவுவதாக அறிக்கை விட்டார். தேர்தலை தனது இஷ்டப்படி தனது ஜால்ரா காவல்துறை அரசு அதிகாரிகளை வைத்து பணத்தை தண்ணீராக இரைத்து ஜெயித்து விடலாம் என்ற கருணாநிதியின் கனவு தேர்தல் தேர்தல் கமிஷனின் இத்தகைய நடவடிக்கைகளால் உடைந்து போனது.
இது பற்றி ஆவேசமாக அறிக்கை விட்டு நீதிமன்றத்தில் வேண்டியப்பட்டவர்களை வைத்து வழக்கும் போடவைத்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக அமைந்தது. மதுரையில் நேர்மையான கலெக்டரான சகாயத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. சகாயம் நேர்மையான நடவடிக்கையில் பேர்போன கலெக்டர். துளியும் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாதவர். அவருடைய நேர்மையான நடவடிக்கைகள் அழகிரியின், மதுரை மாவட்ட தி.மு.க.வினர் செயல்பாடுககளுக்கு பெரும் இடையூராக இருந்தது.
இதனால் மாவட்ட கலெக்டருக்கு எதிராக அழகிரி அறிக்கைவிட்டார். அடிபொடிகளை வைத்து அறிக்கைகள் விட்டார். ஆனாலும் மதுரையில் இவர்களுடைய பாச்சா பலிக்கவில்லை. நினைத்தபடி பணபட்டுவாடாவை நடத்த முடியவில்லை. மதுரையில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிக தொகையை ரூ.3.8கோடியை வாகன சோதனையில் அதிகாரிள் பிடித்தனர். இதனால் மதுரை கலெக்டரை எப்படியாவது மாற்றவேண்டும் என்று அழகிரி தனக்கு வேண்டியப்பட்ட தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த சுகுமாறன் என்ற கோட்டாட்சியர் மூலம் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு எதிராக பெரிய புகாரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளிக்க வைத்தனர்.
தன்னை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சகாயம் தூண்டுவதாகவும், தனக்கு அதனால் மனஉலைச்சல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், கூறி மருத்துவமனையில் சென்று சுகுமாரன் படுத்துக்கொண்டார். கோட்டாட்சியர் சுகுமாரன் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை குடும்ப தொலைக்காட்சி முதல் பல்வேறு செய்திதாள்களில் வெளி வந்தது. அழகிரி ஒரு படி மேலே போய் உள்துறை செயலாளரிடம் மாவட்ட கலெக்டரை பற்றி புகார் அளித்தார்.
இதனிடையே இந்த புகார்களை மறுத்த கலெக்டர் சகாயம் தான் கோட்டாட்சியரை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை என்று மறுத்தார். கோட்டாட்சியர் சுகுமாரனின் புகார் உள்நோக்கம் கொண்டது என்ற உண்மையை புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிரடியாக கோட்டாட்சியர் சுகுமாரனை, மதுரை கிழக்கு பகுதியில் இருந்து மாற்றல் செய்து வேறு மாவட்டத்தில் உடனடியாக நியமிக்கும்படி உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்தில் உளவு பிரிவு தலைவர் ஜாபர்சேட் தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு வேலை பார்த்ததினால் அவரை மாற்றியது போல் மதுரை மாவட்டத்தில் உளவுபிரிவு உதவி கமிஷனராக இருந்த குமாரவேல் என்பவர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்படுவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் உளப்பிரிவு உதவி கமிஷனர் குமாரவேலும் நேற்று அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளால் மதுரை பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மதுரையில் இனி நேர்மையான தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிப்பதை பார்வையிட வந்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இந்த சம்பவம் பற்றி கூறுகையில் கோட்டாட்சியர் சுகுமாரனை தற்காலியமாக மாற்றம் செய்துள்ளோம். விசாரணை செய்து உண்மையினை கொண்டு வருவோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
ஒரே நாளில் 463 கைதிகளுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன்
21 Jan 2026பாட்னா, ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கியதே இதற்கு முன்பு சாதனையாக இருந்த நிலையில் தற்போது, பாட்னா ஐகோர்ட் 463 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கியது புதிய சாதனை படைத்துள்ளத
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது இஸ்ரோ
21 Jan 2026சென்னை, இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை (பி.ஏ.எஸ்.) கட்டுவதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான நடவடிக்கைகளில்
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
பிரதமர் மோடியால் அசாமின் உலக புகழ் பெற்றது 'பகுரும்பா' நடனம்
21 Jan 2026புதுடெல்லி, உலக புகழ் பெற்ற பகுரும்பா நடனத்தை பிரதமர் மோடியின் சமூக ஊடகத்தில் இருந்து 20 கோடி பார்வையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்


