எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.- 4 - தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு மதுரை கலெக்டருக்கு எதிராக பொய் புகார் கொடுத்த கோட்டாட்சியரை அதிரடியாக தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்துள்ளது. இதேபோல், மதுரையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட உளவு பிரிவு உதவி கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் குத்துவெட்டுக்கள் காரணமாக பிரச்சாரம் செய்வதிலும், வேட்பாளர் பெயர் அறிவிப்பதிலும், ஏகப்பட்ட குளறுபடி காரணமாக தாமதமாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். மறுபுறம் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாகாமல் தடுப்பதற்காக உளவு பிரிவு முதல் பல்வேறு பொய் பிரச்சாரங்களை தி.மு.க. பயன்படுத்தியது. இவை அனைத்தையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றிகரமாக அமைந்து கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கினறனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் இடைத்தேர்தல், ஜனநாயகத்திற்கு சவால் விடப்பட்டு வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடந்த தேர்தல் இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தி.மு.க.வினர் காங்கிரஸ் உதவியோடு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த காரணத்தினால் அராஜகமான தேர்தல்களை நடத்தி குறுக்கு வழியில் வெற்றியும் பெற்றனர்.
தமிழகத்தின் நேர்மையான தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா தேர்தலில் தில்லுமுள்ளு செய்த தி.மு.க.வினர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்தபொழுது கருணாநிதி தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை பகீரங்கமாக மிரட்டும் சம்பவமும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தை நீதிமன்றமே கண்டிக்கும் அவல நிலையும் நடந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.வினர் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அனைத்து மட்டங்களிலும் நடந்தது. காவல் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கருணாநிதி குடும்பத்தின் கடைக்கோடி உறவினர்களுக்குக்கூட பயந்து சலாம் போடும் நிலை இருந்தது. தென் மாவட்டங்களில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் சிற்றரசர் போல் அழகிரி வலம்வந்தார். தேர்தலில் தில்லுமுல்லு செய்து வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணத்தை லஞ்சமாக கொடுத்து வாக்குகளை கைப்பற்றும் திட்டத்திற்கு ``அழகிரி பார்முலா'' என்று தி.மு.க.வினர் பெருமையாக சொல்லிக்கொண்டனர்.
இந்த தேர்தலில் இத்தகைய நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதலே தமிழக சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டிய தேர்தல் ஆணையம் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய முறைகள், தவிர்க்கவேண்டிய முறைகள், நேர்மையாக தேர்தல் நடத்த ஒத்துழைக்கும் படி அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டது. அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.
தி.மு.க.வினர் வழக்கம்போல் காவல்துறை, கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் நமக்கு சாதமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தெம்பாக தங்களுடைய திருமங்கலம் பார்முலாவை அமுல் படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். அதற்கு வசதியாக தமிழக டிஜிபி, உளவுப்பிரிவு தலைவர், தமக்கு வேண்டிய மாவட்ட கலெக்டர்களை பயன்படுத்தவும் செய்தனர். இது பற்றி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். காவல் துறை தலைவர், உளவுப்பிரிவு தலைவர், குறிப்பிட்ட கலெக்டர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்தனர். அந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அதிரடியாக காவல்துறை டிஜிபி, உளவுபிரிவு தலைவர், பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை மாற்றியது. அப்படி மாற்றியதில் முக்கியமான மாற்றமாக அழகிரிக்கு ஜதகமாக செயல்பட்டு வந்த கிரானைட் ஊழல் பற்றி துளியும் கண்டுகொள்ளாத மதுரை கலெக்டர் காமராஜ் மற்றும் காவல்துறை ஆணையர் பாரி ஆகியோரும் அடங்குவர். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் கடுமையான வாகனச்சோதனைகளை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பிடித்தது.
இந்த நடவடிக்கைகளால் மிரண்டு போன கருணாநிதி குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்தார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் ஜெயிக்க வைப்பதற்கு ஆணையம் துணை போவதாக அறிக்கை விட்டார். தமிழகத்தில் மெர்ஜென்சி நிலவுவதாக அறிக்கை விட்டார். தேர்தலை தனது இஷ்டப்படி தனது ஜால்ரா காவல்துறை அரசு அதிகாரிகளை வைத்து பணத்தை தண்ணீராக இரைத்து ஜெயித்து விடலாம் என்ற கருணாநிதியின் கனவு தேர்தல் தேர்தல் கமிஷனின் இத்தகைய நடவடிக்கைகளால் உடைந்து போனது.
இது பற்றி ஆவேசமாக அறிக்கை விட்டு நீதிமன்றத்தில் வேண்டியப்பட்டவர்களை வைத்து வழக்கும் போடவைத்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக அமைந்தது. மதுரையில் நேர்மையான கலெக்டரான சகாயத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. சகாயம் நேர்மையான நடவடிக்கையில் பேர்போன கலெக்டர். துளியும் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாதவர். அவருடைய நேர்மையான நடவடிக்கைகள் அழகிரியின், மதுரை மாவட்ட தி.மு.க.வினர் செயல்பாடுககளுக்கு பெரும் இடையூராக இருந்தது.
இதனால் மாவட்ட கலெக்டருக்கு எதிராக அழகிரி அறிக்கைவிட்டார். அடிபொடிகளை வைத்து அறிக்கைகள் விட்டார். ஆனாலும் மதுரையில் இவர்களுடைய பாச்சா பலிக்கவில்லை. நினைத்தபடி பணபட்டுவாடாவை நடத்த முடியவில்லை. மதுரையில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிக தொகையை ரூ.3.8கோடியை வாகன சோதனையில் அதிகாரிள் பிடித்தனர். இதனால் மதுரை கலெக்டரை எப்படியாவது மாற்றவேண்டும் என்று அழகிரி தனக்கு வேண்டியப்பட்ட தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த சுகுமாறன் என்ற கோட்டாட்சியர் மூலம் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு எதிராக பெரிய புகாரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளிக்க வைத்தனர்.
தன்னை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சகாயம் தூண்டுவதாகவும், தனக்கு அதனால் மனஉலைச்சல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், கூறி மருத்துவமனையில் சென்று சுகுமாரன் படுத்துக்கொண்டார். கோட்டாட்சியர் சுகுமாரன் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை குடும்ப தொலைக்காட்சி முதல் பல்வேறு செய்திதாள்களில் வெளி வந்தது. அழகிரி ஒரு படி மேலே போய் உள்துறை செயலாளரிடம் மாவட்ட கலெக்டரை பற்றி புகார் அளித்தார்.
இதனிடையே இந்த புகார்களை மறுத்த கலெக்டர் சகாயம் தான் கோட்டாட்சியரை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை என்று மறுத்தார். கோட்டாட்சியர் சுகுமாரனின் புகார் உள்நோக்கம் கொண்டது என்ற உண்மையை புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிரடியாக கோட்டாட்சியர் சுகுமாரனை, மதுரை கிழக்கு பகுதியில் இருந்து மாற்றல் செய்து வேறு மாவட்டத்தில் உடனடியாக நியமிக்கும்படி உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்தில் உளவு பிரிவு தலைவர் ஜாபர்சேட் தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு வேலை பார்த்ததினால் அவரை மாற்றியது போல் மதுரை மாவட்டத்தில் உளவுபிரிவு உதவி கமிஷனராக இருந்த குமாரவேல் என்பவர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்படுவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் உளப்பிரிவு உதவி கமிஷனர் குமாரவேலும் நேற்று அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளால் மதுரை பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மதுரையில் இனி நேர்மையான தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிப்பதை பார்வையிட வந்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இந்த சம்பவம் பற்றி கூறுகையில் கோட்டாட்சியர் சுகுமாரனை தற்காலியமாக மாற்றம் செய்துள்ளோம். விசாரணை செய்து உண்மையினை கொண்டு வருவோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது
23 Oct 2025சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
23 Oct 2025சென்னை: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர்