LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஏப்.- 5 - கிரானைட் கற்களை வெட்டியெடுக்க முயற்சிசெய்த மு.க.அழகிரியின் திட்டம் முறியடிக்கப்பட்டு ஒத்தக்கடை யானைமலை காப்பாற்றப்படும். அந்தப் பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அய்யர்பங்களாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்தார். மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யர்பங்களாவில் நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:- தமிழ்நாட்டை ஏகபோகமாக கொள்ளையடித்துவரும் ஒரு குடும்ப கும்பலிடம் இருந்து மீட்டு தமிழகத்தை காப்பாற்ற வரும் தேர்தல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியின் கொள்ளைக் கும்பலுக்கு முடிவுகட்டவேண்டும். கருணாநிதி தமிழகத்தை சூறையாடி உலக பெரும் பணக்காரர்களாக தனது குடும்பத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அண்மையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கருணாநிதி பேரன் கலாநிதி மாறன் 310 வது இடத்தில் உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பேரனுக்கு மட்டும் இந்த அளவுக்கு சொத்து இருந்தால், கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உள்ள சொத்துக்களை கணக்கிட்டால் உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் கருணாநிதியின் குடும்பமாகத்தான் இருக்கும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டம் தீட்டி ஆட்சியை நடத்திவரும் கருணாநிதிக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மக்கள் பணத்தை சுரண்டி ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி பல கோடி ஊழல் செய்து, சம்பாதித்துவரும் கருணாநிதியையும், அவரது தேச விரோத சக்திகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த தேர்தல் மூலம் நீங்கள் வீழ்த்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை இப்போது கருணாநிதி பின்னோக்கி தள்ளிவிட்டார். தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் சுமை என்பதுதான் கருணாநதி ஆட்சியின் சாதனையாக உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.
இந்த பகுதிவாழ் மக்களுக்கு பயன்பட்டு வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். ஒத்தக்கடை யானைமலையை உடைத்து சிற்பநகரம் உருவாக்குகிறோம் என்று கூறி, அதிலுள்ள கிரானைட் கற்களை வெட்டியெடுக்க கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் கும்பல் முயற்சி செய்துவருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மு.க.அழகிரியின் முயற்சி முறியடிக்கப்பட்டு யானைமலை காப்பாற்றப்படும். அங்குள்ள மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதிவாழ் மக்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள், பிரச்சனைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்படும். ஒரு ரவுடி கும்பல் தமிழ்நாட்டை அடக்கி ஆள்வதற்கு இந்த தேர்தலில் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.தமிழரசன், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி, சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.கருப்பையா ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.கண்ட சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை கிழக்கு தொகுதிக் கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கருப்பணன், மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
-
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி - துல்கர்
15 Aug 2022துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
-
இன்றைய பெட்ரோல்-டிசல் விலை நிலவரம்-15-08-2022
15 Aug 2022 -
தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2022சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
-
லால்சிங் சத்தா விமர்சனம்
15 Aug 2022அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
-
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை
15 Aug 2022புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
-
விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு: 76-வது சுதந்திர தினம் என்று இந்த ஆண்டை குறிப்பிடுவது ஏன்?
15 Aug 2022புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
-
பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
15 Aug 2022இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
-
சுதந்திர தின உரையில் காகித குறிப்புகளை பயன்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி..!
15 Aug 2022நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
-
சுதந்திர தின உரையில் பிரதமர் பட்டியலிட்ட ஐந்து உறுதிமொழிகள்
15 Aug 2022சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
-
எகிப்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 41 போ் பலி
15 Aug 2022எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
-
கடாவர் விமர்சனம்
15 Aug 2022அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
-
கடமையைச்செய் விமர்சனம்
15 Aug 2022எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
-
இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2022சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
100-வது ஆண்டு சுதந்திர தின விழா நடக்கும் போது 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
15 Aug 2022திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
-
தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுப்பது நல்லதல்ல: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
15 Aug 2022நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
-
கடைசி டி-20 போட்டி: மே.இ.தீவுகள் வெற்றி
15 Aug 2022வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
-
இரண்டு ஆண்டுகள் நிறைவு: எம்.எஸ்.டோனி ஓய்வை சிறப்பிக்கும் விதமாக பதிவிட்ட வீடியோ ஐ.சி.சி.
15 Aug 2022சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
-
செப். 9ல் வெளியாகும் பிரம்மாஸ்திரா
15 Aug 2022ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
-
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை காக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் வீரர் கபில் தேவ் வேண்டுகோள்
15 Aug 2022ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 9-வது முறை தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் பங்கேற்ப்பு
15 Aug 2022நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
-
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து;முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
15 Aug 2022சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
சென்னை தனியார் வங்கிக் கொள்ளை: மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது: 18 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்
15 Aug 2022சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
15 Aug 2022அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.