முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30, 31 ல் இலங்கை அதிபர் ராஜபக்சே - பிரதமர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

டெக்ரான், ஆக. - 28 - ஈ்ரான் தலைநகர் டெக்ரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெக்ரானில் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் அணிசேரா நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ்ஈரானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் இன்று புறப்பட்டுச் செல்கிறார்.  மூன்று நாட்கள் அங்கும் தங்கும் பிரதமர், வெளிநாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இம் மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்திய, இலங்கை உறவு மற்றும் தமிழர் பிரச்சனை ஆகியவை குறித்து இருவரும் விவாதிப்பார்களா? அல்லது தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி மன்மோகன்சிங் கண்டனம் தெரிவிப்பாரா? என்பது பற்றி தகவல்கள் எதுவும் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்