எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. செப்.7 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய கடும் அமளி காரணமாக பாராளுமன்றம் நேற்று 12 வது நாளாக முடக்கப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியதை அடுத்து பெரும் அரசியல் புயல் கிளம்பியது.
இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்சினை காரணமாக கடந்த 11 நாட்களாக பாராளுமன்றம் முடக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தின் லோக் சபை நேற்று காலை கூடியது.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகியே தீர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர்.இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் சபையை சபாநாயகர் மீரா குமார் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
அதன் பிறகு மீண்டும் சபை கூடிய போதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் இதே பிரச்சினயை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து துணை சபாநாயகர் கரிய முண்டா சபையை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைத்தார்.
இதே போல ராஜ்ய சபையிலும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ராஜ்ய சபை முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிறகு சபை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதே பிரச்சினையை கிளப்பி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதை அடுத்து ராஜ்ய சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் 2 மணிக்கு சபை கூடிய போது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டாதல் சபை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று 12 வது நாளாக பாராளுமன்றம் எந்த அலுவல்களையும் நடத்தாமல் முடங்கியது.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


