முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் தொடர்பாக நியூயார்க்கில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், செப். 28 - ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக் கூட்டத்தின் போது ஆப்கானிஸ்தான் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்கான் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆப்கன் விவகாரம் தொடர்பாக முதல் முறையாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்கள் நிலையிலான முதலாவது பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆப்கானிஸ்தானில் இரும்புத் தாது வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்தியாவின் கை ஓங்கி வருகிறது. ஆப்கன் எல்லையையொட்டிய ்ஈரான் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும் இந்தியா முன்வந்திருக்கிறது. இந்தத் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடுமேயானால் பாகிஸ்தான் வழியே ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்காது. மேலும் தற்போது இந்தியாவுக்குப் போட்டியாக ஆப்கானிஸ்தானில் சீனாவும் முதலீடுகளைக் குவிக்கிறது. இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அனேகமாக சீனாவுக்கு கம்பளம் விரிக்கும் ஆப்கனின் நிலை விமர்சிக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்