முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பணி நியமன ஆணைகளை நாளை பெற்றுக்கொள்ளலாம்-கலெக்டர் சகாயம்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,ஏப்.- 11 - தேர்தல் பணி நியமன ஆணைகளை நாளை பெற்றுக்கொள்ளாம் என மாவட்டகலெக்டர் சகாயம்  தெரிவித்தார். வரும் 13 -ம் தேதி அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளார்கள் என்ற விபரம்  இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது கலந்தாதாய்வின் போதுதான் தெரிவரும். எனவே கடந்த 3 -ம் தேதி அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி பணியாளர்கள் அனைவரும் தங்களது இறுதி தேர்தல் பணி நியமன ஆணையினை இரண்டாவது பயிற்சி வகுப்பு நடைபெற்ற அதே மையத்திலேயே நாளை காலை 7 மணிக்கு சென்று நேரில் பெற்றுக்கொள்ளவும். அங்கு வரும்போது அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அங்கிருந்தே செல்வதற்கான முன்னேற்பாடுகளுடன் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்