எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இறுதி நாளான நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து நிறைவு செய்தார்.
இது பற்றி விபரம் வருமாறு:-
ஏற்கனவே சென்னையில் 2 கட்ட பிரச்சாரத்தை செய்த ஜெயலலிதா நிறைவு நாளான நேற்று சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து நேற்று மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே.13-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க., தே.மு.தி.க. சி.பி.எம்., சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுது. கடந்த மார்ச் 24-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார். சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா பிரச்சாரத்தின் இறுதி நாளாளன நேற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்காக திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் மதியம் 12 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா கடற்கரை சாலை வழியாக ராயபுரம் கல்மண்டபம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பின்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் தேரடியை அடைந்த ஜெயலலிதா அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பின் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக பிரச்சாரம் செய்து கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் வெற்றிவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு எம்.கே.பி.நகர், அசோக் பில்லர் அருகே சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சவுந்தர்ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்பு பேசின் பாலம் அருகே வாக்கு சேகரித்த ஜெயலலிதா மின்ட் தங்க சாலை வழியாக பிராட்வே செல்லும் பிரகாசம் சாலையில் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பாரிமுனை கடற்கரை சாலை வழியாக நொச்சிகுப்பம் பின்புறம் உள்ள டுமில் குப்பத்தில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
ஜெயலலிதா செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், பெண்களும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் திரளாக நின்று உற்சாகமாக வரவேற்றனர். வழியெங்கும் கட்சி சின்னங்கள், கொடிகள், பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல இடங்களில் தொண்டர்கள் பூங்கொத்துக்களை வழங்கியும், ஆரத்தி தட்டு மற்றும் பூரண கும்ப மரியாதையும் அளித்து வரவேற்றனர்.
ஒளதுறைமுகம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அர்சகர்கள் திரண்டு வேதம் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். பல இடங்ளில் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நோதாஜி நகரிலும் ஏராளமான முஸ்லீம் பெண் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் வழக்கறிஞர்கள் கை கோர்த்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ராயபுரம் தொடங்கி திருவொற்றியூர் வரை வழியெங்கும் மீனவர்களும், மீனவ சமுதாய பெண்களும் திரளாக சாலையோரம் நின்று ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
மீனவர்களுக்கு படகுகள் வாங்க மானியத்துடன் கடன், மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட 45 நாட்களுக்கு உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தருவது போன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தபோது மீனவர்கள் பெரும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை வழங்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா தமிழகத்தை காக்க ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை காக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக செய்வோம் என்று பதிலளித்தனர்.
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குடிதண்ணீர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா பேசியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்திற்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜெயலலிதா மக்கள் வெள்ளத்தில் நீத்தியபடி மெதுவாகதான் செல்ல முடிந்தது. மக்கள் வெள்ளத்தை விளக்கி வாகனத்தை செலுத்த பாதுகாவலர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மைலாப்பூரில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வந்தபோது மீனவ மக்கள் கடலுக்குள் படகுகளில் பெரிய பெரிய கட்சிக்கொடிகளை கட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
சேலம் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
15 Oct 2025கரூர் : சேலம் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி