எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இறுதி நாளான நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து நிறைவு செய்தார்.
இது பற்றி விபரம் வருமாறு:-
ஏற்கனவே சென்னையில் 2 கட்ட பிரச்சாரத்தை செய்த ஜெயலலிதா நிறைவு நாளான நேற்று சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து நேற்று மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே.13-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க., தே.மு.தி.க. சி.பி.எம்., சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுது. கடந்த மார்ச் 24-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார். சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா பிரச்சாரத்தின் இறுதி நாளாளன நேற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்காக திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் மதியம் 12 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா கடற்கரை சாலை வழியாக ராயபுரம் கல்மண்டபம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பின்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் தேரடியை அடைந்த ஜெயலலிதா அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பின் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக பிரச்சாரம் செய்து கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் வெற்றிவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு எம்.கே.பி.நகர், அசோக் பில்லர் அருகே சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சவுந்தர்ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்பு பேசின் பாலம் அருகே வாக்கு சேகரித்த ஜெயலலிதா மின்ட் தங்க சாலை வழியாக பிராட்வே செல்லும் பிரகாசம் சாலையில் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பாரிமுனை கடற்கரை சாலை வழியாக நொச்சிகுப்பம் பின்புறம் உள்ள டுமில் குப்பத்தில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
ஜெயலலிதா செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், பெண்களும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் திரளாக நின்று உற்சாகமாக வரவேற்றனர். வழியெங்கும் கட்சி சின்னங்கள், கொடிகள், பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல இடங்களில் தொண்டர்கள் பூங்கொத்துக்களை வழங்கியும், ஆரத்தி தட்டு மற்றும் பூரண கும்ப மரியாதையும் அளித்து வரவேற்றனர்.
ஒளதுறைமுகம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அர்சகர்கள் திரண்டு வேதம் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். பல இடங்ளில் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நோதாஜி நகரிலும் ஏராளமான முஸ்லீம் பெண் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் வழக்கறிஞர்கள் கை கோர்த்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ராயபுரம் தொடங்கி திருவொற்றியூர் வரை வழியெங்கும் மீனவர்களும், மீனவ சமுதாய பெண்களும் திரளாக சாலையோரம் நின்று ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
மீனவர்களுக்கு படகுகள் வாங்க மானியத்துடன் கடன், மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட 45 நாட்களுக்கு உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தருவது போன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தபோது மீனவர்கள் பெரும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை வழங்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா தமிழகத்தை காக்க ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை காக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக செய்வோம் என்று பதிலளித்தனர்.
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குடிதண்ணீர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா பேசியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்திற்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜெயலலிதா மக்கள் வெள்ளத்தில் நீத்தியபடி மெதுவாகதான் செல்ல முடிந்தது. மக்கள் வெள்ளத்தை விளக்கி வாகனத்தை செலுத்த பாதுகாவலர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மைலாப்பூரில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வந்தபோது மீனவ மக்கள் கடலுக்குள் படகுகளில் பெரிய பெரிய கட்சிக்கொடிகளை கட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.