முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளடாக்டர் கொலை: அபுதாபியில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

துபாய், நவ. - 5 - அபுதாபியில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ராஜன் டேனியலை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் அல் அலி மருத்துவமனையில் டாக்டர் ராஜன் டேனியல் பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் இருந்த போது மிகப் பெரிய கத்தியுடன் உள்ளே நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன் ஆட்டை வெட்டுவது போல் வெட்டிக் கொலை செய்திருக்கிறான். தமது உறவினர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததற்கு டாக்டர் ராஜன் டேனியலே காரணம் என்பதால் தாம் அவரைக் கொலை செய்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கூறியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு முதல் அபுதாபியில் டாக்டர் ராஜன் பணிபுரிந்து வந்தார். இக்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்