எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஏப்.16 - அழகர் மலையில் இருந்து கள்ளழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். வருகிற 18 ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடியும் தருவாயில் உள்ள நிலையில் அழகர் கோவில் சித்திரை திருவிழா முக்கிய கட்டத்தை நெருங்குகிறது. ஆண்டாளை திருக்கல்யாணம் செய்த இடம்தான் அழகர்கோவில். இந்த கோவில் பற்றியும், மலையை பற்றியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரிபாடல் பாடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் இந்த கோவிலில் உள்ள் பெருமாளையும், தீர்த்தங்கள் பற்றியும் பாடப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த நிலையில் மணக்கோலத்தில் காட்சியளிப்பது இந்த கோவிலின் பெருமையாகும். இவ்வுளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலின் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அதிலும், சித்ரா பவுணர்மி அன்று அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்குவது முக்கிய நிகழ்ச்சியாகும்.
சுந்தர்ராஜபெருமாள் இன்று மாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் மலையை விட்டு புறப்படுகிறார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்தகள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைப்பார்கள். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு அழகர் மூன்றுமாவடி வருகிறார். அங்கு பக்தர்கள் எதிர்கொண்டுஅழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் பிறகு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் எழுந்தருளுகிறார். இங்கு இரவு 1 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை அழகருக்கு அணிவிக்கப்படுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் துவங்குகிறது. 18 ம் தேதி (திங்கட்கிழமை) சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்ககுதிரை வாகனத்தில் அமர்ந்து காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிழக்க வைகை ஆற்றில் இறங்குகிறார்.
பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு வரும் அழகருக்கு பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது ஒரே நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும். இரவு 1 மணிக்கு அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலில் எழுந்தருளுகிறார். இங்கு விடிய, விடிய அழகரை பக்தர்கள் தரிசிக்கிறார்கள். மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், ஏகாந்த சேவையும் நடக்கிறது. காலை 10 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளிக்கிறார். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகர் இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சி நடைபெறுகிறது. அதிகாலை மோகனாவதாரத்துடன் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க கோலத்துடன் எழுந்தருளுகிறார். 21 ம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசிப்பார்கள்.
ரூ.1.50 கோடியில் அழகருக்கு புதிய தங்க குதிரை வாகனம்
அழகர் பெருமான் வைகை ஆற்றில் இறங்கும் போது அமர்ந்து வரும் தங்க குதிரை பல ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த தங்க குதிரை வாகனம் பழுதடைந்து விட்டது. இதனால் புதிய தங்க குதிரை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன் படி ரூ. 1.50 கோடி மதிப்பில் தங்க குதிரை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குதிரைக்கு கண் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று தங்க குதிரை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
அழகருக்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு
மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் போது எப்போதும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது அணை வறண்டு குடிநீருக்கே தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனால் அழகருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு வைகை அணையில் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது. இதனால் அழகர் இறங்குவதற்காக தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி நேற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது நாளை காலை மதுரையை வந்தடையும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் அசத்தல்
04 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி சிராஜ் அசத்தினார்.
587 ரன்கள் குவிப்பு...
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஜடேஜா குறித்து நடுவரிடம் முறையிட்ட பென ஸ்டோக்ஸ்
04 Jul 2025பர்மிங்காம் : இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.
-
ஹாரி புரூக் - ஜேமி சுமித் அபாரம்: சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து அணி
04 Jul 2025பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹாரி புரூக் மற்றும் ஜேமி சுமித் இருவரும் சதமடித்துள்ளனர்.
-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்து சச்சினை முந்திய சுப்மன் கில்
04 Jul 2025பர்மிங்காம் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
05 Jul 2025சென்னை, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.