எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்நாதனை கொலை செய்ய தி.மு.க. வேட்பாளரும், மணல் கொள்ளையருமான கே.சி. பழனிசாமியின் ஆட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்ட கூலிப் படையினர் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நடமாடிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவதையொட்டி, வி. செந்தில்நாதனுக்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
13.4.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது, தி.மு.க.வினரின் தில்லுமுல்லுகளையும், முறைகேடுகளையும், அராஜகங்களையும் சுட்டிக் காட்டிய அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தோல்வி பயம் காரணமாக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினருக்கு எதிராகவும், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்களுக்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தேர்தல் நாளன்று, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க.விற்கு எதிராக மக்கள் வாக்களிக்கின்றனர் என்பதை அறிந்த தி.மு.க.வினர், கழக உடன்பிறப்புகளையும், பொதுமக்களையும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் அ.தி.மு.க. தொண்டர்கள் சேதுபதி மற்றும் தியாகராஜன் என்கிற தேவர் ஆகிய இருவரும் படுகாயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மார் பகுதி கழக கிளைச் செயலாளர் பிரேம்நாத் வீட்டை தி.மு.க. ரவுடிக் கும்பல் அடித்து நொறுக்கியதுடன் அவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த பிரேம்நாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஆவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகி முத்துராமலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. ரவுடிக் கும்பல் அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளது.
இதே தொகுதிக்குட்பட்ட வடிவேல்கரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் குபேந்திரன் என்பவரை பிரகாஷ் என்பவரின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ரவுடிக் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயமடைந்த குபேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, கடலூர் மாவட்டம், அண்ணாகிராம ஒன்றியம், ஏழுமேடு பஞ்சாயத்து, முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வீரப்பன், ஹேமச்சந்திரன், கருணாகரன் ஆகியோர் கழகத்திற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்ததை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வினர் கழக உடன்பிறப்புகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பல கொடூரச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போதுள்ள காவல் துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறை என்பதை அனைவரும் அறிவர். உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரை ராஜ்குமார் என்பவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான அன்பு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்று இருக்கிறார். ஆனால், காவல் துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது. இதனால் விரக்தியுடன் வெளியே வந்த அன்புவை, ராஜ்குமார் உள்ளிட்டோர் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.
தற்போது தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்! தமிழக காவல் துறையின் கையாலாகாத்தனத்தை கருத்தில் கொண்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க.வினரை இரும்புக் கரம் கொண்டு அடக்குமாறும், வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தற்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் வி.செந்தில்நாதனை கொலை செய்ய தி.மு.க. வேட்பாளரும், மணல் கொள்ளையருமான கே.சி. பழனிசாமியின் ஆட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்ட கூலிப் படையினர் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நடமாடிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிசாமி பண பலம், படை பலம், அதிகார பலம் மிக்கவர் என்பதால், கழக வேட்பாளர் வி. செந்தில்நாதனுக்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிடுமாறும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி
31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
31 Oct 2025காந்தி நகர் : சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


