எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.26 - தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று nullநீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவிடம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தில் தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு nullநீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைத்திருந்தது. இக்குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் இந்த கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகக்கூறி தனியார் பள்ளிகள் அதை ஏற்க மறுத்தன. இதையடுத்து சுமார் 6,400 பள்ளி நிர்வாகிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையொட்டி ஐகோர்ட்டு மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து கட்டணத்தை சரி செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் nullநீதிபதி கோவிந்தராஜன் இந்த குழுவிலிருந்து திடீரென விலகினார். உடல் நலம் காரணமமாகவும், சொந்த பிரச்சனையின் காரணமாகவும் அவர் இக்குழுவிலிருந்து விலகுவதாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற nullநீதிபதி ரவிராஜ் பாண்டியன் கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் குறித்து கருத்து கேட்டனர். ஏற்கனவே மற்ற மாவட்ட பள்ளிகளில் கருத்து கேட்பு முடிந்து விட்டது. பல மாதங்களாக நடைபெற்று வரும் கருத்து கேட்பு கூட்டம், இப்போது சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம் கல்வி கட்டணம் சரிதானா? அல்லது கூடுதலாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கலாமா? என்பதை பற்றி கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் nullநீதிபதி ரவிராஜபாண்டியன் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அவருடன் மெட்ரிகுலேசன் இயக்குனர் தேவராஜூம் உடன் இருந்தார். ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் சுமார் 5 நிமிட நேரம் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு? நீnullங்கள் எவ்வளவு வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு எழுத்து nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் எழுதி கொடுத்தனர். பள்ளிக்கூடத்திற்கு கட்டப்படும் வரி, மின்சார செலவு, தொலைபேசி, கம்ப்யூட்டர் செலவு, பள்ளி வாடகை, பேப்பர் வாங்கும் செலவு, கட்டிட பராமரிப்பு செலவு, ஆசிரியர்களின் சம்பளம் போன்றவைக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பதை எழுத்துப்nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் எழுதி வாங்கி கொண்டனர். சென்னையில் மொத்தம் 600 பள்ளிகளில் இருந்து இதுபோன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. இதற்காக nullநீதிபதி ரவிராஜபாண்டியன் வருகிற 27-ந் தேதி வரை(நாளை வரை) மனுக்கள் வாங்குகிறார். இதன் பிறகு வருகிற மே மாதம் 2-ந் தேதி ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகிகளிடமும் மனுக்கள் பெற உள்ளார். அனேகமாக 10ந் தேதிக்குள் கல்வி கட்டண நிர்ணயம் குறித்து ஒரு தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு குழுவில் ஆஜராகி மனு கொடுத்துவிட்டு வந்த பள்ளி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சுப்பாராவ்: (துர்கா மெட்ரிகுலேசன் பள்ளி, கோடம்பாக்கம்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி.க்கு ரூ.3,500 நிர்ணயம் செய்திருப்பதை ரூ.7 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்2க்கு ரூ.7 ஆயிரம் நிர்ணயித்ததை ரூ.15 ஆயிரம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டுள்ளோம். டி.டி. அரசு:(டி.டி.ஒ. மெட்ரிகுலேசன் பள்ளி, சூளைமேடு) எல்.கே.ஜி.க்கு ரூ.2050 அரசு நிர்ணயித்துள்ளது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்2 க்கு ரூ.16 ஆயிரம் வசூலிக்க அனுமதி கோரி உள்ளோம்.
புருஷோத்தமன்: (எவர்வின் மெட்ரிக் பள்ளி, கொளத்தூர்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயித்திருந்தனர். இதை ரூ.13 ஆயிரமாக உயர்த்தி தர கேட்டுள்ளோம். பிளஸ்2 வகுப்புக்கு ரூ.11 ஆயிரம் நிர்ணயித்துள்ளதை ரூ.28 ஆயிரத்திற்கு உயர்த்தி தருமாறு கேட்டுள்ளோம்.
ஆக, வந்திருந்த நிர்வாகிகள் அனைவருமே அரசு நிர்ணயித்துள்ள தொகையைக்காட்டிலும் குறைந்தபட்சம் இரு மடங்காவது அதகரித்துத் தரவேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் மகன் நிஷாந்த் உறுதி
16 Nov 2025பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி
-
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து: சென்னை போக்குவரத்து கழகம், மெட்ரோ நிறுவனத்திற்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து
17 Nov 2025சென்னை, நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வர் மு
-
துணைவேந்தர்கள் நியமன மசோதா விவகாரம்: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு டிச.2க்கு ஒத்திவைப்பு
17 Nov 2025சென்னை, துணைவேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு டிச.2க்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


