முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி தாசில்தார்-எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஏப் 27, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் ஆஜராகாத தாசில்தாருக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரமக்குடி அருகேயுள்ள கே.கருங்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் டேங்க் அமைக்கும் பணியை முடித்துவிட்டு கடந்த 08.04.05 அன்று வீடு திரும்பிக் 

கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் மீது கைபட்டுவிட்டதாக கூறி சாதி பெயரை சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர். 

கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து பரமக்குடி சின்னக்கடை தெருவை சேர்ந்த சுரேஷ்(எ) மீனாட்சி சுந்தரம்(41), கமுதக்குடியை சேர்ந்த கரிகாலன்(33) ஆகிய இருவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இந்த வழக்கு ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கருப்பையாவுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் ஹாஜா முகைதீன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டும் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதை தொடர்ந்து ராமநாதபுரம் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாலசுந்தரகுமார் தாசில்தார் ஹாஜா மூகைதீனுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சங்கருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்