எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூன். 6 - சிறு வாகன விபத்து காரணமாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உட்பட 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் முதன்மை செயலராக பணியாற்றுபவர் சர்கம் ரஸா. இவர் அலுவலகத்தில் இருந்து காரில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள சராய் பகுதியில் கார் வந்த போது அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரும், அவரது பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து கார் ஓட்டுனருக்கும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கார் ஓட்டுனரும், தூதரக அதிகாரியும் தாக்கப்பட்டதாகவும் அதில் இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தூதரக அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இதனிடையே டெல்லியில் தங்கள் நாட்டு தூதர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் கோபால் பாக்னேளுக்கு பாகிஸ்தாந் அரசு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய புலனாய்வு நடத்துமாறும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறும் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


