எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஜூன். 12 - தென் மேற்கு பருவ மழையால் மும்பையில் பலத்த மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கடந்த 1 ம் தேதி துவங்கியது. அங்கு தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் தாக்கம் கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்றும், நேற்று முன்தினமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை நகரமே வெள்ளத்தில் மிதப்பது போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ், ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
பலத்த மழை காரணமாக மும்பை மாஹிம் மேற்கு பகுதியில் 35 ஆண்டு பழமைவாய்ந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 12 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். போலீசாரும், தீயணைப்பு படையினரும் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் என்றாலும் வயதான ஆண், பெண் உட்பட 5 பேர் இடிபாடுகளில் நசுங்கி பலியானார்கள். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


