முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 மணி நேரத்தில் 38 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

காபூல், ஜூன் - 25 ​- ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 38 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் உறுதி படுத்தியுள்ளது. இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஆப்கானிஸ்தானில் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி வரும் தலிபான்கள், சமீப காலமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக வன்முறையில் ்டுபட்டு வருகின்றனர். . இந்நிலையில், தலிபான்களுக்கும் ஆப்கன் ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 தீவிரவாடிகள் உயிரோடு பிடிபட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தலிபான் தீவிரவாதிகள் நன்கர்ஹார், பர்வான், கந்தகார், சாபூல், உருஸ்கன், வர்டாக், லோகர், கஸ்னி, ஹெல்மண்ட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்