எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில், ஜூலை. 1 - முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக நாகர்கோவில் கோர்ட்டுக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார். அவரை பார்க்கவும், வழக்கில் ஆஜராகவும், தே.மு.தி.க. தொண்டர்களும், வக்கீல்களும் கோர்ட்டு முன்பு கூடி நின்றனர். விஜயகாந்த் கோர்ட்டுக்குள் நுழைந்ததும், தே.மு.தி.க. வக்கீல்களும், தொண்டர்களும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டுக்குள் சென்றனர்.
சிலர் கோர்ட்டு வளாகத்தில் விஜயகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதற்கு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த வக்கீல்களும், அரசு வக்கீல் ஞானசேகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்குள் கோஷமிடுவோரை கோர்ட்டு வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோர்ட்டு அறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை தவிர மற்றவர்கள் வெளி யேற்றப்பட்டனர். அப்போது தே.மு.தி.க. வக்கீல்களுக்கும், கோர்ட்டில் இருந்த மற்ற வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மூண்டது. இதில், சிலர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து கோர்ட்டு முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தகராறில் ்டுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அ.தி.மு.க. வக்கீல் ஞானசேகர் கோட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.அதில், கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டுக்கு இன்று ஆஜராக வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்த என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் போர்வையில் வக்கீல் அல்லாதவர்களும் கோர்ட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடவடிக்கையில் ்டுபட்டனர். அவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
பின்னர் வக்கீல் ஞானசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் விஜயகாந்த் வந்து கொண்டிருப்பதாகவும், வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். நீதிபதியும் அதை ஏற்று சிறிது நேரம் வழக்கை தள்ளி வைத்தார்.
அடுத்து ஒரு கொலை வழக்கு மீதான விசாரணை நடந்தது. நான் அந்த வழக்கில் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்து கொண்டு இருந்தேன். பகல் 11.30 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. என்னவென்று விசாரிப்பதற்குள் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் நுழையும் பாதை வழியாக விஜயகாந்த்தும், அவருடன் வந்தவர்களும் நுழைந்து விட்டனர். விஜயகாந்த் சாட்சி கூண்டில் ஏறாமல் என் அருகே வந்து நின்றார். இதுபற்றி நான் நீதிபதியிடம் முறையிட்டேன். விசாரணைக்கு தேவை இல்லாதவர்களை அறையில் இருந்து வெளியேற்றும்படியும் கூறினேன். இதை கேட்டதும் விஜயகாந்த் என்னை முறைத்தார். அவருடன் இருந்த வக்கீல்கள் என்னை அடிக்க பாய்ந்தனர். சிலர் தாக்கவும் செய்தனர்.
நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த தாக்குதலில் எனது மூக்கு கண்ணாடி உடைந்தது. அருகில் இருந்த மற்ற வக்கீல்கள் என்னை பாதுகாத்தனர். விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்தவர்களால் தாக்கப்பட்டது பற்றி போலீசில் நான் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் அரசு வக்கீல் ஞானசேகர் தாக்கப்பட்டதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவசெல்வராஜன், ஜான் தங்கம் மற்றும் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பால்வளத்துறை தலைவர் அசோகன் உள்பட பல்வேறு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் விரைந்து வந்தனர். அவர்கள் ஞானசேகருக்கு ஆறுதல் கூறியதோடு சம்பவம் பற்றியும் கேட்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் போலீசார் கோர்ட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ்டுபட்டனர். தாக்கப்பட்ட அரசு வக்கீல் ஞானசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


