தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகர்கோவில், ஜூலை. 1 - முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக நாகர்கோவில் கோர்ட்டுக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார். அவரை பார்க்கவும், வழக்கில் ஆஜராகவும், தே.மு.தி.க. தொண்டர்களும், வக்கீல்களும் கோர்ட்டு முன்பு கூடி நின்றனர். விஜயகாந்த் கோர்ட்டுக்குள் நுழைந்ததும், தே.மு.தி.க. வக்கீல்களும், தொண்டர்களும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டுக்குள் சென்றனர்.
சிலர் கோர்ட்டு வளாகத்தில் விஜயகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதற்கு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த வக்கீல்களும், அரசு வக்கீல் ஞானசேகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்குள் கோஷமிடுவோரை கோர்ட்டு வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோர்ட்டு அறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை தவிர மற்றவர்கள் வெளி யேற்றப்பட்டனர். அப்போது தே.மு.தி.க. வக்கீல்களுக்கும், கோர்ட்டில் இருந்த மற்ற வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மூண்டது. இதில், சிலர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து கோர்ட்டு முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தகராறில் ்டுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அ.தி.மு.க. வக்கீல் ஞானசேகர் கோட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.அதில், கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டுக்கு இன்று ஆஜராக வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்த என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் போர்வையில் வக்கீல் அல்லாதவர்களும் கோர்ட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடவடிக்கையில் ்டுபட்டனர். அவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
பின்னர் வக்கீல் ஞானசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் விஜயகாந்த் வந்து கொண்டிருப்பதாகவும், வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். நீதிபதியும் அதை ஏற்று சிறிது நேரம் வழக்கை தள்ளி வைத்தார்.
அடுத்து ஒரு கொலை வழக்கு மீதான விசாரணை நடந்தது. நான் அந்த வழக்கில் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்து கொண்டு இருந்தேன். பகல் 11.30 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. என்னவென்று விசாரிப்பதற்குள் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் நுழையும் பாதை வழியாக விஜயகாந்த்தும், அவருடன் வந்தவர்களும் நுழைந்து விட்டனர். விஜயகாந்த் சாட்சி கூண்டில் ஏறாமல் என் அருகே வந்து நின்றார். இதுபற்றி நான் நீதிபதியிடம் முறையிட்டேன். விசாரணைக்கு தேவை இல்லாதவர்களை அறையில் இருந்து வெளியேற்றும்படியும் கூறினேன். இதை கேட்டதும் விஜயகாந்த் என்னை முறைத்தார். அவருடன் இருந்த வக்கீல்கள் என்னை அடிக்க பாய்ந்தனர். சிலர் தாக்கவும் செய்தனர்.
நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த தாக்குதலில் எனது மூக்கு கண்ணாடி உடைந்தது. அருகில் இருந்த மற்ற வக்கீல்கள் என்னை பாதுகாத்தனர். விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்தவர்களால் தாக்கப்பட்டது பற்றி போலீசில் நான் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் அரசு வக்கீல் ஞானசேகர் தாக்கப்பட்டதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவசெல்வராஜன், ஜான் தங்கம் மற்றும் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பால்வளத்துறை தலைவர் அசோகன் உள்பட பல்வேறு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் விரைந்து வந்தனர். அவர்கள் ஞானசேகருக்கு ஆறுதல் கூறியதோடு சம்பவம் பற்றியும் கேட்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் போலீசார் கோர்ட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ்டுபட்டனர். தாக்கப்பட்ட அரசு வக்கீல் ஞானசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் : ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்து வைத்திலிங்கம் பேட்டி
04 Feb 2023சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
-
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
04 Feb 2023வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
-
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்
04 Feb 2023சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
04 Feb 2023சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டி.ஜி.பி. எச்சரிக்கை
04 Feb 2023சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Feb 2023சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பழனியில் தைப்பூச தேரோட்ட திருவிழா : விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்
04 Feb 2023பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
-
அப்ரிடியின் மகளை மணந்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி
04 Feb 2023பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
-
பிக் பாஷ் லீக் போட்டி: பிரிஸ்பேனை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்பெர்த்,
04 Feb 2023இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
-
இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர் தான் - ரவிச்சந்திரன் அஷ்வின்
04 Feb 2023இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
-
இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி
04 Feb 2023வாணியம்பாடி : வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்தனர்.
-
ரஞ்சி டிராபி: பஞ்சாபை வீழ்த்தியது சவுராஷ்டிரா - அரையிறுதியில் கர்நாடக அணியுடன் மோதல்
04 Feb 2023ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது: ஐகோர்ட்
04 Feb 2023சென்னை : சொந்த மக்களை அரசே சுரண்டக் கூடாது. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
04 Feb 2023சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-05-02-2023
05 Feb 2023 -
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்
05 Feb 2023சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
05 Feb 2023சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
-
சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
05 Feb 2023சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
-
உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்
05 Feb 2023வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும் : எலான் மஸ்க் தகவல்
05 Feb 2023வாஷிங்டன் : எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு
05 Feb 2023திருவாரூர் : இந்த வருடத்திற்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.