Idhayam Matrimony

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Train-1 2025-10-18

Source: provided

சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரயில் நிலையங்களில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். 

இந்த திட்டத்தின்படி, முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ரயில் நிலையங்களில் பிரத்யேக நுழைவு வாயில்கள், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு பிரத்யேக காத்திருப்பு அறை மற்றும் நடைமேடைகளை எளிதில் அணுகிட போதிய வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும் தேவையான இடங்களில் நடைமேம்பாலம், சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் நாட்டில் முதல் முறையாக டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 76 ரயில் நிலையங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த பட்டியலில் சென்னை எழும்பூர் நிலையமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து