முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை.22 - காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் ராம்பன் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்ததையடுத்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளுமாறு ஹரியத் மாநாடு கட்சிஅழைப்பு விடுத்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சட்டம்- ஒழுங்கு நிலை சீராக உள்ளதால் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரில் நிலைமையை போலீஸாரும், பாதுகாப்பு ஏஜன்சிகளும் உன்னிப்பாகத் கவனித்து வருவதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

சோபியான், புல்வமா, குல்காம், அனந்த்நாக், சோபோர் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு நடந்த மோதலில் 100 பேர் காயமடைந்தனர். தற்போது வன்முறை சம்பவங்கள் நடந்ததாகத் தகவல் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்