Idhayam Matrimony

எல்லையில் பதட்டத்தை தணிக்க நடவடிக்கை: பாக். பிரதமர்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. 16 - எல்லை பகுதியில் நிலவும் பதட்டத்தை தணிக்க பாகிஸ்தான் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதியளித்தார். பாகிஸ்தானுக்கு வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எல்லையில் நிலவும் பதட்டம் எங்களுக்கும் ஐ.நா.பொதுச் செயலருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்கும் பொறுப்பு இரு நாடுகளுக்கும் உண்டு. எங்களது பிரதான நோக்கம் அமைதி, அதை எட்ட இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர வேண்டும். 

ஐ.நா. செயல் திட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை நீண்ட காலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. தீர்மானத்தின் மூலம் அமைதி வழியில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விஷயத்தில் ஐ.நா. முக்கிய பங்காற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார். அப்போது பான்கீமூன் கூறுகையில், இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்த்து அண்டை நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளை முழு மனதுடன் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார். இதனிடையே இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராவலாகோர்ட் பகுதியில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago