Idhayam Matrimony

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: இந்திய ராணுவ வீரர் காயம்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஆக. 16 - ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுதந்திர தின நாளான நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.  ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த 4 நாட்களில் மட்டும் 9 முறைகள் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்நிலையில் சுதந்திர தினமான நேற்றும் பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் பகுதியில் மெந்தார் என்ற இடத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தாக்குதலில் ்ஈடுபட்டது. இந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள். அவர்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அடாவடிகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட பாகிஸ்தானிடம் வெங்காயத்திற்காக கையேந்தப் போகிறதாம் மத்திய அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago