முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானஸ்தானில் தலிபான் தாக்குதலில் 17 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ஹீரட், ஆப்கானிஸ்தான், ஆக.18 - ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். அடுத்த ஆண்டு வெளிநாட்டுப் படைகள் வாபஸ் ஆக உள்ள நிலையில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹீரட் பிராந்தியத்தின் கருக் மாவட்டத்தில் ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தங்கி இருந்த முகாம் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அப்துல் ரபி அகமது என்ற அதிகாரி இதைத் தெரிவித்தார். இதை தலிபான்கள் என்று நேரடியாகத் தெரிவிக்காமல் ஆப்கானிஸ்தானின் எதிரிகள் இந்தசெயலில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி மறைமுகமாக தெரிவித்தார். சாலையில் குண்டு வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட  5 பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர். மார்ஜா மாவட்டத்தில் வேனில் குண்டு வெடித்ததில் 5 பேர் இறந்தனர்.  முசா குவாடா மாவட்டத்தில் குண்டு வெடித்து 3 பெண்கள் இறந்தனர்.  ஆப்ரன் போரில் இறந்தவர்கள் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்