முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 4 பேர் பலி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

பீஜிங், செப். 1 - தென்மேற்கு சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 4 பேர் பலியாகினர்.யுனான் மாகாணத்தில் உள்ள ஷங்ரிலா மற்றும் டெகன் மாவட்டம் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள டெராங் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 என பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பயங்கரமான குலுங்கின.

600 வீடுகள் சரிந்து சேதமடைந்தன. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர். கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டதால் பல பகுதிகளின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள் இடிந்து விழுந்த இடிபாடுகளிலும் நிலச்சரிவிலும் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முழுமூச்சுடன் ்ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்