முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொதுக்குழு கூட்டம்: பிரதமர் 28-ல் பேசுகிறார்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,செப்.7 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றவிருக்கும் தேதியிலத் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐ.நா. வெளியிட்டுருந்த உரையாற்றுவோர் பட்டியலில் அவர் இம்மாதம் 27-ம் தேதி பேசுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியான பட்டியலின் படி அவர் அதற்கு மறுநாள் உரையாற்றுவார் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவதற்கு வசதியாக இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இரு தலைவர்களும் 27-ம் தேதி வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையில் சந்தித்து பேசுவார்கள் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் அதன்பிறகு அங்கிருந்து கிளம்புவார் என்றும் தெரிகிறது. 27-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உரையாற்றுகிறார். அவர் பிரதமரானதற்கு பிறகு அவர் உரையாற்றும் முதல் சர்வதேச கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்