எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, செப்.28 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்குமாறு 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடிப் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு 4 கேள்விகளுக்கு பதில் தருமாறு ஆந்திரா, மத்தியபிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஷ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அக்டோபர் மாதம் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகளின் கருத்தை கேட்ட பின்னர் தான் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 1993-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு பதிலளித்த மத்திய அரசின் அட்வகேட் தெனரல் வாறனவதி, நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் மத்திய அரசின் பணி முடிந்து விடுகிறது. தனியார் நிறுவனங்கள் இயற்கை வளமான நிலக்கரி சுரங்கங்களுக்கு உரிமை கோர முடியாது. மாநில அரசிடம் பல்வேறு ஒப்புதல் பெற்ற பின்னர் தான் தனியார் நிறுவனங்கள் ஏநிலக்கரி எடுக்கும் உரிமையைப் பெறுகின்றன,
எந்த ஒரு நிறுவனத்துக்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்படவில்லை. இந்த விவகராத்தில் மத்திய அரசு அனைத்து விதிகளையும் கடைபிடித்துள்ளது ணஎன்றார்.
இதையடுத்து மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்க மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


