முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் 50 சடலங்கள் கண்டெடுப்பு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

மன்னார், பிப்.12 - இலங்கையில் ஆ ய்வு நடத்தியபோது 50 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் காணாமல்போனவர்களின் சடலங்களாக இருக்கும் என்று கருதப்ப டுகிறது. இதனால் தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் குடிநீர் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 4 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. நீதித்துறை உத்தரவின் படி மருத்துவ அதிகாரி தனxசெயா வைத்திய ரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர். இந்நிலையில்  ஒரு பகுதியில் ஆய்வு நடத்தியபோது 3 எலும்புக் கூடுகள் கிடைத்தன. இதுபற்றி தனxசெயா  கூறுகையில், ஒரே இடத்தில் பல அடுக்குகளாக 50 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன என்றார்.

அந்த பகுதியில் தோண்ட, தோண்ட எலும்புக் கூடுகள் கிடைத்ததால் இலங்கை தமிழர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இலங்கை போரின்போது பலலர் காணாமல் போயினர். அவர்களைப் பற்றிய விவரங்களை  தெரிவிக்க வேண்டும் என்று அரசை கண்டித்து  தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்