எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.25 - அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வும் வந்து விட்டது. இக்கட்சி நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து அ.தி.மு.க. முன்னணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அ.தி.மு.க. - தே.மு.தி.க. மக்கள் விரும்புகிற ஒரு வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட்கள், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளில் புதிய தமிழகம் கட்சி, குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளன. தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வும் வந்து இணைய வேண்டும் என்று இரு கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் விரும்பினார்கள். அவர்களது விருப்பம் நேற்று நிறைவேறியது. அ.தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. நேற்று வந்து சேர்ந்து விட்டது.
அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. கட்சி சார்பில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சியின் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.
தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தே.மு.தி.க. தேர்தல் பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தையை தொடங்கியபோது இருதரப்பிலும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சுமார் 1 1/4 மணி நேரம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வெளியே வந்தபோது தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அக்கரையோடு உள்ள அரசியல் கட்சிகள் ஒரு அணியாக உருவாகவேண்டும் என்ற எண்ணம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளோம். மக்கள் விரும்புகிற கூட்டணி இந்த கூட்டணி. வருகிற தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். இது வெற்றி கூட்டணி.
இவ்வாறு பண்ரூட்டி கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்பொழுது?
பதில்:- இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேசி முடித்துள்ளோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மீண்டும் கூடி பேச திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி:- விஜயகாந்த் மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று கூறினார். இப்பொழுது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளாரே?
பதில்:- ``மக்கள் குரலே, மகேசன் குரல்'' இப்போது நடக்கும் தி.மு.க. ஆட்சியை தொலைத்துக் கட்டவும், தேர்தலில் புதிய ஆட்சி மலரவும் மக்களின் குரலும், தெய்வத்தின் குரலும், ஒன்றாக உள்ளது. அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கேள்வி:- ஜெயலலிதாவை, விஜயகாந்த் எப்போது சந்தித்து பேசுவார்?
பதில்:- இருதரப்பிலும், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சந்தித்து பேசுவார்.
கேள்வி: ஆட்சியில் பங்கை நீங்களும் கேட்பீர்களா?
பதில்: அந்த ஆசையெல்லாம் எங்களுக்கு இல்லை.இவ்வாறு பண்ருட்டி பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.