முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரிச் முறைகேடு வழக்கு: குற்றப் பத்திரிகை தாக்கல்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.11 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பு தாக்கல் செய்தது. 

1993ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த விசாரணையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக தனியார் நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் பல அரசு ஊழியர்கள் மீது 16 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை ஹைதராபாத்தைச் சேர்ந்த என்.பி.பி.எல். நிறுவனத்துக்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. 

இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சந்திர பிரசாத், திரி விக்ராமா ஆகியோர் மீது சதி வேலையில் ஈடுபட்டது, மோசடி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

என்.பி.பி.எல். நிறுவனத்துக்கு 2250 மெ.வா. உற்பத்தி திறன் கொண்ட அணல் மின் நிலையம் அமைக்க உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உரிமத்தை என்.பி.பி.எல். நிறுவனம், ரூ.200 கோடி லாபத்திற்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது என்பது குற்றச்சாட்டாகும். 

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஒப்புகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்