முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்ந்தது

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

அம்பை, ஜூன் 4 - நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது. பாணதீர்த்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 வது நாளாக நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 30 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும் உயர்ந்ததுள்ளது. அதோ போல் கடனா, ராமநதி அணைகளிலும் 30 அடி நீர் பெருகியுள்ளது.

அணைப்பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து பாணதீர்த்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியிலும் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் உல்லாச பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் கார் நெல் சாகுபடி ஆயத்த பணியை தொடங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்