எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே 12 - நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள் புரியவில்லை எனக் கூறி ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டால் சிறை செல்ல நேரிடும் என்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, சந்தோலியா ஆகியோரை தொடர்ந்து ஷாஹித் உஸ்மான் பல்வா வாக்குமூலம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதி எழுப்பி உள்ள கேள்விகளை புரிந்து கொண்டு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை நீதிபதி ஷைனி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பல்வாவுக்கு நீதிமன்றம் அளித்த அனுமதியை மேற்கோள்காட்டி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களும் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதியிடம் அனுமதி பெற்றனர். இதன்படி கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, மாநிலங்ளவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
ஷாஹித் பல்வா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் எழுத்துப் பிழைகள் இருந்ததால் அவற்றை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி அவருக்கு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். ஆனால் அவர் தாக்கல் செய்த பதில்களும் தெளிவாக இல்லை. அது பற்றி நீதிபதி கேட்டதற்கு பல்வேறு கேள்விகள் புரியவில்லை என்று பல்வா கூறினார்.
இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறைகளை நீதிபதி ஷைனி மீண்டும் தொடங்கினார். அப்போது பல்வா மீண்டும் என்னிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் புரியும்படியாக இல்லை. வேறு வடிவில் கேட்க முடியுமா? என்று கோரினார். அவரது இந்த நடவடிக்கைக்கு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் லலித் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
பல்வாவின் செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை 130 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்துள்ளார். மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நீதிமன்ற விசாரணை நேரத்தை தாமதப்படுத்த பல்வா முயற்சிக்கிறார் என்று லலித் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து நீதிபதி ஷைனி, பல்வாவின் நடவடிக்கையால் அவர் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். இந்த வழக்குக்கு அவர் ஒத்துழைப்புதர கூடாது என்கிற ரீதியில் செயல்படுகிறார். எனது பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கேள்விகள் புரியவில்லை என்று கூறும் பல்வா, எந்த புரிதலுடன் ஏற்கனவே 500 கேள்விகளுக்கான பதிலை தாக்கல் செய்தார்.
இப்போது 130 கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளார். மிக பெரிய தொழில் அதிபர் என கூறி கொள்ளும் பல்வா, நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்கிறார். அவர் நீதிமன்றத்துக்கு வெளியே இருப்பதை விட சிறைக்கு செல்ல தகுதியானவராக இருக்கிறார். நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும் என்று அவரை எச்சரிக்கிறேன் என்றார் நீதிபதி ஷைனி. இதையடுத்து பல்வாவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். கேள்விகள் புரியவில்லை என கூறுவதில் உண்மை உள்ளது. உள்நோக்கத்துடன் இவ்வாறு செயல்படவில்லை என இருவரும் கூறினர். இருப்பினும் அதை ஏற்காத நீதிபதி ஷைனி, பல்வா விவகாரத்தில் (இன்று) திங்கட்கிழமை முடிவெடுப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
இன்றைய ராசிபலன்
29 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026


