எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே 12 - நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள் புரியவில்லை எனக் கூறி ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டால் சிறை செல்ல நேரிடும் என்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, சந்தோலியா ஆகியோரை தொடர்ந்து ஷாஹித் உஸ்மான் பல்வா வாக்குமூலம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதி எழுப்பி உள்ள கேள்விகளை புரிந்து கொண்டு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை நீதிபதி ஷைனி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பல்வாவுக்கு நீதிமன்றம் அளித்த அனுமதியை மேற்கோள்காட்டி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களும் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதியிடம் அனுமதி பெற்றனர். இதன்படி கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, மாநிலங்ளவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
ஷாஹித் பல்வா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் எழுத்துப் பிழைகள் இருந்ததால் அவற்றை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி அவருக்கு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். ஆனால் அவர் தாக்கல் செய்த பதில்களும் தெளிவாக இல்லை. அது பற்றி நீதிபதி கேட்டதற்கு பல்வேறு கேள்விகள் புரியவில்லை என்று பல்வா கூறினார்.
இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறைகளை நீதிபதி ஷைனி மீண்டும் தொடங்கினார். அப்போது பல்வா மீண்டும் என்னிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் புரியும்படியாக இல்லை. வேறு வடிவில் கேட்க முடியுமா? என்று கோரினார். அவரது இந்த நடவடிக்கைக்கு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் லலித் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
பல்வாவின் செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை 130 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்துள்ளார். மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நீதிமன்ற விசாரணை நேரத்தை தாமதப்படுத்த பல்வா முயற்சிக்கிறார் என்று லலித் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து நீதிபதி ஷைனி, பல்வாவின் நடவடிக்கையால் அவர் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். இந்த வழக்குக்கு அவர் ஒத்துழைப்புதர கூடாது என்கிற ரீதியில் செயல்படுகிறார். எனது பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கேள்விகள் புரியவில்லை என்று கூறும் பல்வா, எந்த புரிதலுடன் ஏற்கனவே 500 கேள்விகளுக்கான பதிலை தாக்கல் செய்தார்.
இப்போது 130 கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளார். மிக பெரிய தொழில் அதிபர் என கூறி கொள்ளும் பல்வா, நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்கிறார். அவர் நீதிமன்றத்துக்கு வெளியே இருப்பதை விட சிறைக்கு செல்ல தகுதியானவராக இருக்கிறார். நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும் என்று அவரை எச்சரிக்கிறேன் என்றார் நீதிபதி ஷைனி. இதையடுத்து பல்வாவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். கேள்விகள் புரியவில்லை என கூறுவதில் உண்மை உள்ளது. உள்நோக்கத்துடன் இவ்வாறு செயல்படவில்லை என இருவரும் கூறினர். இருப்பினும் அதை ஏற்காத நீதிபதி ஷைனி, பல்வா விவகாரத்தில் (இன்று) திங்கட்கிழமை முடிவெடுப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.
31 Oct 2025 -
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
வெறுப்புவாத அரசியல் செய்கிறது: பா.ஜ.க. மீது கனிமொழி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : வெறுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க.வின் வாடிக்கை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.


