எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, மே 12 - நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள் புரியவில்லை எனக் கூறி ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டால் சிறை செல்ல நேரிடும் என்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, சந்தோலியா ஆகியோரை தொடர்ந்து ஷாஹித் உஸ்மான் பல்வா வாக்குமூலம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதி எழுப்பி உள்ள கேள்விகளை புரிந்து கொண்டு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை நீதிபதி ஷைனி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பல்வாவுக்கு நீதிமன்றம் அளித்த அனுமதியை மேற்கோள்காட்டி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களும் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதியிடம் அனுமதி பெற்றனர். இதன்படி கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, மாநிலங்ளவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
ஷாஹித் பல்வா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் எழுத்துப் பிழைகள் இருந்ததால் அவற்றை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி அவருக்கு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். ஆனால் அவர் தாக்கல் செய்த பதில்களும் தெளிவாக இல்லை. அது பற்றி நீதிபதி கேட்டதற்கு பல்வேறு கேள்விகள் புரியவில்லை என்று பல்வா கூறினார்.
இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறைகளை நீதிபதி ஷைனி மீண்டும் தொடங்கினார். அப்போது பல்வா மீண்டும் என்னிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் புரியும்படியாக இல்லை. வேறு வடிவில் கேட்க முடியுமா? என்று கோரினார். அவரது இந்த நடவடிக்கைக்கு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் லலித் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
பல்வாவின் செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை 130 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்துள்ளார். மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நீதிமன்ற விசாரணை நேரத்தை தாமதப்படுத்த பல்வா முயற்சிக்கிறார் என்று லலித் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து நீதிபதி ஷைனி, பல்வாவின் நடவடிக்கையால் அவர் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். இந்த வழக்குக்கு அவர் ஒத்துழைப்புதர கூடாது என்கிற ரீதியில் செயல்படுகிறார். எனது பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கேள்விகள் புரியவில்லை என்று கூறும் பல்வா, எந்த புரிதலுடன் ஏற்கனவே 500 கேள்விகளுக்கான பதிலை தாக்கல் செய்தார்.
இப்போது 130 கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளார். மிக பெரிய தொழில் அதிபர் என கூறி கொள்ளும் பல்வா, நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்கிறார். அவர் நீதிமன்றத்துக்கு வெளியே இருப்பதை விட சிறைக்கு செல்ல தகுதியானவராக இருக்கிறார். நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும் என்று அவரை எச்சரிக்கிறேன் என்றார் நீதிபதி ஷைனி. இதையடுத்து பல்வாவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். கேள்விகள் புரியவில்லை என கூறுவதில் உண்மை உள்ளது. உள்நோக்கத்துடன் இவ்வாறு செயல்படவில்லை என இருவரும் கூறினர். இருப்பினும் அதை ஏற்காத நீதிபதி ஷைனி, பல்வா விவகாரத்தில் (இன்று) திங்கட்கிழமை முடிவெடுப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ரபேல் குறித்து அவதூறு: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
07 Jul 2025பாரிஸ், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்ற ரபேல் போர் விமானம் குறித்து சீனா போலியான தகவலை பரப்பி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளத
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.