எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஜூன்.- 6 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். பல முறை மத்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை ஆதரித்து நாடெங்கும் பல லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று ராம்தேவுடன் காந்தியவாதி அண்ணா ஹசாரேயும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதனால் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக மிகப் பெரும் எழுச்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதானத்திற்கு கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளை சீல் வைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகளை பார்த்த அவரது சீடர்கள் ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து ராம்தேவை சுற்றி வளையம் அமைத்திருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் போலீஸ் உயரதிகாரிகள் ராம்தேவிடம் வந்து பேசினார்கள்.
யோகா பயிற்சி முகாம் நடத்துவதற்காகத்தான் இந்த மைதானம் உங்களுக்கு வாடகைக்கு தரப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருப்பது சட்டவிரோத செயலாகும். எனவே அமைதியாக வெளியேறுங்கள் என்றனர். போலீசாரின் கோரிக்கையை ராம்தேவ் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராம்தேவை நோக்கி அதிரடிப் படை போலீசார் விரைந்தனர். உடனே நூற்றுக்கணக்கானோர் ராம்தேவை சூழ்ந்து நின்று கொண்டனர். அப்போது மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடினர். இரண்டரை மணியளவில் மேடையில் இருந்து கீழே குதித்த ராம்தேவ் இரண்டு சீடர்கள் தோள் மீது ஏறி இருந்தபடி பேசினார். யாரும் வன்முறைகளில் ஈடுபட கூடாது. அமைதியாக இருங்கள். யாரும் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டார்.
அப்போது போலீசாருக்கும், மைதானத்தில் திரண்டிருந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. உண்ணாவிரதம் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அந்த சமயம் ராம்தேவை போலீசார் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வெளியில் சென்றனர். அவருடன் ஆச்சார்ய பாலகிருஷ்ணன், ஜெய்தீப் ஆர்யா ஆகியோரும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிறகு ராம்தேவ் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறினார். டெல்லி போலீசாரும் ராம்தேவை கைது செய்யவில்லை என்றனர். டெல்லிக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு விட்டதாக போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு மைதானத்தில் இருந்தவர்களும் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ராம்தேவின் காலவரையற்ற உண்ணாவிரதம் அதிரடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ராம்தேவ் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது அதிக நேரம் மர்மமாக இருந்தது. நியு போலீஸ் லைனில் உள்ள ஆபீசர்ஸ் மெஸ்சில் அவரை போலீசார் சிறிது நேரம் வைத்திருந்தனர். அப்போது டெல்லியில் இருந்து வெளியேற ராம்தேவ் சம்மதித்தார். உடனே அவர் அரித்துவாருக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு புறநகரில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் போலீசார் ராம்தேவை டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டது நேற்று காலை உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று காலை சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் வழியாக அரித்துவாரில் உள்ள அவரது முகாமுக்கு ராம்தேவ் அழைத்து செல்லப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் பிள்ளை கூறினார். 11.45 மணியளவில் அரித்துவாரில் உள்ள அவரது ஆசிரமத்தை சென்றடைந்தார். ரகசிய இடத்தில் இருந்து பத்திரிக்கை நிருபர்களை தொடர்பு கொண்ட ராம்தேவ், அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து நாடெங்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
சிட்னி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன்: ஆஸ்திரேலிய காவல்துறை தகவல்
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
15 Dec 2025சென்னை, ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது: ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம்
15 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில்
-
தே.மு.தி.க. மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு
15 Dec 2025சென்னை, தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
-
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
15 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயரும்..!
15 Dec 2025சென்னை, சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது: ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையானது.
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு
15 Dec 2025கீவ், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
15 Dec 2025மேட்டூர், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
15 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு
15 Dec 2025சென்னை, மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், க


