எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி,ஜூன்.- 6 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். பல முறை மத்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை ஆதரித்து நாடெங்கும் பல லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று ராம்தேவுடன் காந்தியவாதி அண்ணா ஹசாரேயும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதனால் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக மிகப் பெரும் எழுச்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதானத்திற்கு கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளை சீல் வைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகளை பார்த்த அவரது சீடர்கள் ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து ராம்தேவை சுற்றி வளையம் அமைத்திருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் போலீஸ் உயரதிகாரிகள் ராம்தேவிடம் வந்து பேசினார்கள்.
யோகா பயிற்சி முகாம் நடத்துவதற்காகத்தான் இந்த மைதானம் உங்களுக்கு வாடகைக்கு தரப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருப்பது சட்டவிரோத செயலாகும். எனவே அமைதியாக வெளியேறுங்கள் என்றனர். போலீசாரின் கோரிக்கையை ராம்தேவ் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராம்தேவை நோக்கி அதிரடிப் படை போலீசார் விரைந்தனர். உடனே நூற்றுக்கணக்கானோர் ராம்தேவை சூழ்ந்து நின்று கொண்டனர். அப்போது மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடினர். இரண்டரை மணியளவில் மேடையில் இருந்து கீழே குதித்த ராம்தேவ் இரண்டு சீடர்கள் தோள் மீது ஏறி இருந்தபடி பேசினார். யாரும் வன்முறைகளில் ஈடுபட கூடாது. அமைதியாக இருங்கள். யாரும் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டார்.
அப்போது போலீசாருக்கும், மைதானத்தில் திரண்டிருந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. உண்ணாவிரதம் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அந்த சமயம் ராம்தேவை போலீசார் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வெளியில் சென்றனர். அவருடன் ஆச்சார்ய பாலகிருஷ்ணன், ஜெய்தீப் ஆர்யா ஆகியோரும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிறகு ராம்தேவ் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறினார். டெல்லி போலீசாரும் ராம்தேவை கைது செய்யவில்லை என்றனர். டெல்லிக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு விட்டதாக போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு மைதானத்தில் இருந்தவர்களும் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ராம்தேவின் காலவரையற்ற உண்ணாவிரதம் அதிரடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ராம்தேவ் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது அதிக நேரம் மர்மமாக இருந்தது. நியு போலீஸ் லைனில் உள்ள ஆபீசர்ஸ் மெஸ்சில் அவரை போலீசார் சிறிது நேரம் வைத்திருந்தனர். அப்போது டெல்லியில் இருந்து வெளியேற ராம்தேவ் சம்மதித்தார். உடனே அவர் அரித்துவாருக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு புறநகரில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் போலீசார் ராம்தேவை டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டது நேற்று காலை உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று காலை சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் வழியாக அரித்துவாரில் உள்ள அவரது முகாமுக்கு ராம்தேவ் அழைத்து செல்லப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் பிள்ளை கூறினார். 11.45 மணியளவில் அரித்துவாரில் உள்ள அவரது ஆசிரமத்தை சென்றடைந்தார். ரகசிய இடத்தில் இருந்து பத்திரிக்கை நிருபர்களை தொடர்பு கொண்ட ராம்தேவ், அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து நாடெங்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை..!
13 Jul 2025திண்டுக்கல் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.