எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி,ஜூன்.- 6 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். பல முறை மத்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை ஆதரித்து நாடெங்கும் பல லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று ராம்தேவுடன் காந்தியவாதி அண்ணா ஹசாரேயும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதனால் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக மிகப் பெரும் எழுச்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதானத்திற்கு கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளை சீல் வைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகளை பார்த்த அவரது சீடர்கள் ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து ராம்தேவை சுற்றி வளையம் அமைத்திருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் போலீஸ் உயரதிகாரிகள் ராம்தேவிடம் வந்து பேசினார்கள்.
யோகா பயிற்சி முகாம் நடத்துவதற்காகத்தான் இந்த மைதானம் உங்களுக்கு வாடகைக்கு தரப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருப்பது சட்டவிரோத செயலாகும். எனவே அமைதியாக வெளியேறுங்கள் என்றனர். போலீசாரின் கோரிக்கையை ராம்தேவ் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராம்தேவை நோக்கி அதிரடிப் படை போலீசார் விரைந்தனர். உடனே நூற்றுக்கணக்கானோர் ராம்தேவை சூழ்ந்து நின்று கொண்டனர். அப்போது மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடினர். இரண்டரை மணியளவில் மேடையில் இருந்து கீழே குதித்த ராம்தேவ் இரண்டு சீடர்கள் தோள் மீது ஏறி இருந்தபடி பேசினார். யாரும் வன்முறைகளில் ஈடுபட கூடாது. அமைதியாக இருங்கள். யாரும் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டார்.
அப்போது போலீசாருக்கும், மைதானத்தில் திரண்டிருந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. உண்ணாவிரதம் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அந்த சமயம் ராம்தேவை போலீசார் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வெளியில் சென்றனர். அவருடன் ஆச்சார்ய பாலகிருஷ்ணன், ஜெய்தீப் ஆர்யா ஆகியோரும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிறகு ராம்தேவ் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறினார். டெல்லி போலீசாரும் ராம்தேவை கைது செய்யவில்லை என்றனர். டெல்லிக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு விட்டதாக போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு மைதானத்தில் இருந்தவர்களும் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ராம்தேவின் காலவரையற்ற உண்ணாவிரதம் அதிரடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ராம்தேவ் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது அதிக நேரம் மர்மமாக இருந்தது. நியு போலீஸ் லைனில் உள்ள ஆபீசர்ஸ் மெஸ்சில் அவரை போலீசார் சிறிது நேரம் வைத்திருந்தனர். அப்போது டெல்லியில் இருந்து வெளியேற ராம்தேவ் சம்மதித்தார். உடனே அவர் அரித்துவாருக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு புறநகரில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் போலீசார் ராம்தேவை டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டது நேற்று காலை உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று காலை சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் வழியாக அரித்துவாரில் உள்ள அவரது முகாமுக்கு ராம்தேவ் அழைத்து செல்லப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் பிள்ளை கூறினார். 11.45 மணியளவில் அரித்துவாரில் உள்ள அவரது ஆசிரமத்தை சென்றடைந்தார். ரகசிய இடத்தில் இருந்து பத்திரிக்கை நிருபர்களை தொடர்பு கொண்ட ராம்தேவ், அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து நாடெங்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.