எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேராடூன்,ஜூன்.- 13 - யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் நேற்று முடிவுக்கு வந்தது. அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர். நாட்டில் பெருகி வரும் ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தியும் பாபா ராம்தேவ் தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் அவரது போராட்டத்தின் போது டெல்லியில் தடியடி நடத்தப்பட்டது. இந்த வரலாற்று தவறை வரலாறு மன்னிக்காது என்று யோகா குரு ராம்தேவ் சாபமிட்டார். பிறகு ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்தில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து டேராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவ விஞ்ஞான மையத்தில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள். இந்த நிலையில்தான் ஆன்மீக தலைவர்களில் ஒருவரான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் யோகா குருவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினார். ஆனால் ராம்தேவ் அதற்கு செவிசாய்க்கவில்லை. இருப்பினும் ரவிசங்கர் தனது முயற்சியை கைவிடவில்லை.
நேற்று மூன்றாவது நாளாக ராம்தேவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தவே அவரும் அதை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதன் மூலம் ராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ராம்தேவ் பழரசம் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக ரவிசங்கர் பிறகு தெரிவித்தார். பல்வேறு மத தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் முன்னிலையில் ராம்தேவ் தனது உண்ணாவிரதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் விஜய் தஸ்மானா கூறுகையில், இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து ராம்தேவ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றி என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். ராம்தேவின் உடல்நிலை இன்றே டிஸ்சார்ஜ் செய்யும் அளவில் இல்லை. அவர் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று விஜய் தஸ்மானா தெரிவித்தார்.
இதற்கிடையில் ராம்தேவின் முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல செய்தி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


