எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, ஜூலை - 4 - டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மரியா, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவடைந்ததால் விடுதலை செய்யப்பட்டார். சினிமா வாய்ப்பு தேடி மும்பை வந்தவர் மரியா சூசைராஜ்(30). சில டி.வி. தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். அப்போது டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவருக்கும் மரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. குரோவர் தான் தயாரிக்கும் டி.வி. நிகழ்ச்சிகளில் வாய்ப்பு தருவதாக கூறிவந்தார். இதனால் இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினர். ஆனால் சொன்னபடி குரோவர் வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை. இதனால் மரியாவிற்கு குரோவரின் மேல் கோபம் ஏற்பட்டது. இதனை தனது காதலனும் கடற்படை அதிகாரியுமான எமிலி ஜெரோமிடம் கூறி வருத்தப்பட்டார் மரியா.
இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி மலாடில் உள்ள மரியாவின் வீட்டிற்கு நீரஜ் குரோவர் வந்தார். அதேசமயத்தில் ஜெரோமும் அங்கு வந்தார். அப்போது குரோவருக்கும் ஜெரோமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடிந்தது. இந்த சண்டையின்போது ஜெரோம் கத்தியை எடுத்து குரோவரை குத்தி கொலை செய்தார். பிறகு மரியாவும் ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மும்பை அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டனர். இந்த கொலை தொடர்பாக மரியாவும், ஜெரோமும் அந்த மே மாதம் 21 ம் தேதியே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்த்வானி, கொலைத் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஜெரோமிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இதில் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதால் மரியா சுசைராஜ் மும்பை பைகுலா சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை சந்திக்க பத்திரிகையாளர்கள் மற்றும் பலரும் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர். ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த மரியா ஒரு காரில் ஏறி சென்றுவிட்டார்.
மரியாவின் வழக்கறிஞர் ஷரீப் ஷேக் இதுகுறித்து கூறுகையில், இ.பி.கோ. 201-வது பிரிவின் கீழ்(தடயங்களை அழித்தல்) மரியா ஏற்கனவே 3 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டார். அவரது இளம் வயது காரணமாக அவருக்கு குறைந்த தண்டனை வழங்கும்படி நீதிபதியை கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்தார். ஜெரோம் இன்னும் 7 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மரியாவுக்கும், ஜெரோமுக்கும் மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி சந்த்வானி, இந்த பணம் நீரஜ் குரோவரின் தந்தையிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இந்த தீர்ப்பில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறியுள்ள குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீரஜ்ஜின் தாய் நீலம் கூறுகையில், விடுதலை செய்யப்பட்டுள்ள மரியாவால் என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது. மரியா ஒரு பொய்யர். அவர் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் கூட தீட்டலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா, மரியாவை வைத்து படம் ஒன்று எடுக்க விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார். ஒரு நடிகை ஆவதற்கான முதிர்ச்சி சிறையில் இருந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்டிருக்கும். மேலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் விளம்பரமும், மக்களுக்கு அவர் மேல் ஏற்பட்டுள்ள ஆர்வமும் நான் எடுக்கும் அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் என்றும் வர்மா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.