எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,ஜூலை.- 7 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரளாவில் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதே வேளையில் பத்மநாபசுவாமி கோயிலில் தமிழக கலாச்சார சின்னங்கள் இருப்பதால் இதில் தமிழகத்திற்கும் பங்குண்டு. ஆகவே இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று கிளிரோ அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருக்கும் பொற்குவியல்களின் மதிப்பை கணக்கிட்டு பட்டியலிடுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு முன்னிலையில் அறைகள் திறக்கப்பட்டது. ஒவ்வொரு அறையிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள் பொற்குவியல்களாக இருந்தது. மொத்தமுள்ள 6 அறைகளில் பி அறையை தவிர மற்ற அறைகள் திறக்கப்பட்டு விட்டன. பி அறை இரும்பு திரைகளால் மூடப்பட்டு இருப்பதால் அதை திறக்க முடியவில்லை. நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு அறையை திறப்பது குறித்து நாளை இறுதி முடிவெடுக்கப்படுகிறது.
இதற்கிடையில் பி அறையை திறந்தால் நாட்டுக்கே ஆபத்து என அரச குடும்பம் தெரிவித்ததாக தகவல் பரவியது. ஆனால் அரசு குடும்பத்தினர் அதை மறுத்துள்ளனர். இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் இருந்த நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. பி அறையையும் திறந்து கணக்கிட்டால் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் கோடியை எட்டும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாருக்கு சொந்தம் என்பதில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த நகைகள் கோவில் சொத்து. அவற்றை கோவிலில் வைத்து பாதுகாப்போம் என அறநிலையத் துறை மந்திரி கூறியுள்ளார். அதே நேரம் இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதை கேட்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த நகைகள் மன்னர் குடும்பத்துக்கே சொந்தமானது. எனவே நகைகளை மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பி உள்ளனர்.
நகைகள் மதிப்பிடப்படுவதை நிறுத்த வேண்டும். மதிப்பீட்டின் மூலம் கோவிலுக்கு தீவிரவாதிகள் மற்றும் கொள்ளையர்களால் ஆபத்து வரும் என்று சிலர் கருதுகிறார்கள். இந்த கோவிலில் தமிழக கலாச்சார சின்னங்கள் இருப்பதால் தமிழகத்திற்கும் பங்குண்டு. எனவே இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என கிளிரோ அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அருட்காட்சியகம் அமைத்து கோயில் நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். புதையல் இருந்தால்தான் அரசு அதை கையகப்படுத்த முடியும். இந்த கோயில் நகைகள் அனைத்தும் அரச குடும்பத்தினரும், பக்தர்களும் காணிக்கையாக கொடுத்தது. ஆகவே இதை அரசு எடுக்க முடியாது என்று வரலாற்று ஆய்வாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவில் நகைகள் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும். கேரளாவில் சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு நகைகளை அரசு எடுக்க வேண்டும் என பலவிதமான குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பொற்குவியல் கணக்குகளை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ