எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.12 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பட அதிபர் சக்சேனா மீது மோசடி புகார் அளித்ததையடுத்து 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விபரம் வருமாறு:- தீராத விளையாட்டு பிள்ளை பட விவகாரத்தில் தனக்கு பாக்கி தரவேண்டியதை திருப்பி கேட்டபோது தன்னை அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணத்தை அபகரித்துக் கொண்டதாக சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது பட அதிபர் செல்வராஜ் புகார் அளித்ததன் பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.
தன்னை மிரட்டி தாக்கி ரூ.25 லட்சம் பணத்தை பிடிங்கிக் கொண்டதாக சக்சேனா, அய்யப்பன் மற்றும் இன்னொரு கூட்டாளி மீது புகார் அளித்ததையடுத்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சக்சேனாவின் பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே தியேட்டர் அதிபர்கள் எந்திரன் படம் விவகாரம் சந்பந்தமாக சன் பிக்சர்ஸ் மீதும், கலாநிதி மாறன் மீதும் புகார் அளித்தனர். சக்சேனா மீது ஏற்கனவே வேளச்சேரியில் பெண்ணை தாக்கிய வழக்கிலும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கிலும் போலீசாரால் எப்.ஐ.ஆர். போடப்பட்டு நிலுவையில் உள்ளது. இதில் பெண்ணை தாக்கிய வழக்கில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துமே ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குகள் ஆகும்.
இதனிடையே சக்சேனா விவகாரம் சம்பந்தமாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் அனேகம் பேர் புகார் அளிக்க தயாராகி வருகிறார்களாம். 2 நாள் போலீஸ் விசாரணையில் சக்சேனா பல்வேறு விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸில் தான் ஒரு நிர்வாகி மட்டுமே, எனக்கு மேலே உள்ளவர்கள் சொன்னதை மட்டுமே செய்தேன். மேலுள்ளவர்கள் என்ன சொன்னார்களோ அதை செய்தேன். பட அதிபர்களிடம் பெற்ற பணத்தை மேலே உள்ளவர்களிடம் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு 2 வது முறையாக சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை மாஜிஸ்திரேட் இன்று ஒத்தி வைத்தார். இதனிடையே சக்சேனா மீது மேலும் ஒரு பட அதிபர் ரூ.3.37 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்தவர் நேமிசந்த் ஜபக். இவர் பட அதிபர். நான் அவனில்லை, படிக்காதவன், பொக்கிஷம் மற்றும் தனுஷ், அனுஷ்கா நடித்த மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு மாப்பிள்ளை பட விநியோகத்தின் கோவை விநியோக உரிமையை தன்னிடம் ரூ.3.37 கோடிக்கு விற்ற சக்சேனா பட விநியோகத்தை தராமல் நேரடியாக வெளியிட்டு பணத்தை சுருட்டியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி கேள்வி கேட்ட தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஆட்சி மாற்றம் வரும் வரை தன்னால் எதுவும் செய்ய முடியாததால் தற்போது புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சக்சேனா மீது கோடம்பாக்கம் போலீசார் 420, 406, 386, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் சக்சேனா விவகாரத்தில் பொல்லாதவன், ஆடுகளம் தயாரிப்பாளர் கதிரேசன், வல்லக்கோட்டை பட தயாரிப்பாளர், முத்துக்கு முத்தாக சேட்டிலைட் ரைட்ஸ் சம்பந்தமாக டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரும், விநியோகத் துறையில் ஜாம்பவானுமான முக்கிய புள்ளி ஒருவரும் புகார் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்கதை போல் சக்சேனா மீது மேலும், மேலும் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.