எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர், ஆக.- 16 - கடந்த தி.மு.க ஆட்சியினால் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டைப்போக்க ரூ.2196 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்திசெய்ய ஜெயலலிதா திட்டம் தீட்டியுள்ளார் என்று கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் பட்ஜெட் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் திருவிகா தலைமை வகித்தார். கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து பேசிய கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:-
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா 1.83 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார். தமிழக வரலாற்றிலேயே சாதனை முயிற்சியாக 2011-2012 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடியில் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதில் முதியோர் உதவித்தொகையை ரூ.500-லிருந்து ரூ.1000-மாக உயர்த்தி அதற்காக ரூ.2892 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியினால் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டைப்போக்க ரூ.2196 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்திசெய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதன்மூலம் 2012-ம் ஆண்டு முதல் மின்வெட்டில்லா மாநில தமிழகம் இருக்கும் என அறிவித்துள்ளார்.
இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1280 கோடி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1246 கோடி, சூரிய சக்தி பசுமை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.992 கோடி, பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க ரூ.589 கோடி என தமிழக ஏழை-எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர நிதி ஒதுக்கீடு செய்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்துள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளம் கூட போட பணம் இல்லை என்றனர். ஆனால், இன்று முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் போட கடந்த ஜூன் மாதத்திற்கு 60 கோடியும், ஜூலை மாதத்திற்கு ரூ.50 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளார்கள். மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் தொகுதி இணை செயலாளர்கள் விஜயகுமார், தியாகராஜன், மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, இளைஞர் அணி செயலாளர் பாஸ்கரன், பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், தலைவர் சுந்தர்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் சாதிக், தாந்தோணி நகர்மன்ற தலைவர் ரேவதி ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவாக சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
05 May 2024திருநெல்வேலி : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த