எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.7 - பல கோடி ரூபாய் பண மோசடி செய்து அதை திருப்பிக் கேட்ட தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வடசென்னை தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு, சன்பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன், வி.எஸ்.பாபு அண்ணன் மகன் தினகரன் ஆகியோர் மீது சினிமா இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர காவல் கமிஷனரிடம் புகார் அளித்தார். நேற்று சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இயக்குநர் சக்தி சிதம்பரம் வந்து கமிஷனர் திரிபாதியை சந்தித்து 2 புகார்களை அளித்தார். அதில் ஒரு புகாரில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு மற்றும் அவரது அண்ணன் மகன் ஜெ.தினகரன் ஆகியோர் மீதும், மற்றொரு புகார் சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீதும் அளித்தார்.
முதல் புகாரில் சக்தி சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது:-
சன் பிக்சர்ஸ் எடுத்து இயக்குநர் சங்கர் இயக்கி ரஜனிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் செங்கல்பட்டு ஏரியாவில் 8 திரையரங்குகளில் திரையிடும் உரிமையை ரூ.4 கோடி கொடுத்து நான் பெற்றேன். இதை கேள்விபட்டு தன்னை அணுகிய வி.எஸ்.பாபு, தனது அண்ணன் மகன் ஜெ.தினகரன் சினிமா தொழில் செய்ய விருப்பம் உள்ளதால் அவரை எந்திரன் பட விநியோகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். செல்வாக்கு மிக்க பிரமுகர் என்பதால் சக்தி சிதம்பரம் எதுவும் சொல்லாமல் ஒத்துக் கொண்டுள்ளார்.
அதன்பின் படத்தின் வரவு- செலவு கணக்கையும் தினகரனே பார்த்துள்ளார். இதனிடையே சக்தி சிதம்பரத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான 23 1ற2 சென்ட் நிலம் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ளது. ஒரு வங்கியில் ரூ.85 லட்சத்திற்கு அடமானத்தில் இருந்துள்ளது. இந்த நிலத்தை மீட்டு உரிய விலைக்கு விற்க சக்தி சிதம்பரத்திற்கு அவரது உறவினர்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இந்த அடமான நிலம் பற்றி ஜெ.தினகரனிடம் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். உடனே தினகரன் எங்கள் தொழிலே அதுதான், அடமான நிலத்தை மீட்டு விற்றுத் தருவதுதான் எங்கள் வேலை என்று கூறியுள்ளார்.
பின்பு சக்தி சிதம்பரத்திடம் வி.எஸ்.பாபு கோஷ்டியினர் ரூ.4 கோடிக்கு அந்த நிலத்தை விலை பேசி உள்ளனர். முதலில் ரூ.85 லட்சத்தை சக்தி சிதம்பரத்திடம் கொடுத்து நிலப்பத்திரத்தை மீட்டு வரும்படி கூறியுள்ளனர். பத்திரப்பதிவு நடைபெறும்போது மீதி தொகையை தருவதாக கூறியுள்ளனர். சொன்னபடி சக்தி சிதம்பரம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி மீதி ரூ.3 கோடியே 15 லட்சத்தை தராமல் வி.எஸ்.பாபு, தினகரன் கோஷ்டியினர் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுபற்றி சக்தி சிதம்பரம் நிலத்துக்கான பணம் ரூ.3 கோடியே 15 லட்சம் மற்றும் எந்திரன் விநியோகம் சம்பந்தமான வரவு பணத்தையும் சரிபார்த்து பணத்தை ஒப்படைக்கும்படி வி.எஸ்.பாபு மற்றும் தினகரனிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் கிடையாது, பணத்தை கேட்டால் உங்கள் எல்லோரையும் தொலைத்துக் கட்டி விடுவேன். துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், எனக்கும் உள்ள உறவு உனக்கு தெரியாதா? சினிமா துறையில் இதுவே உனது கடைசி வியாபாரமாகி விடும் என்று மிரட்டி அனுப்பி விட்டனர்.
இதன்பின்பு இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் மவுனமாக இருந்தவர் அ.தி.மு.க. ஆட்சி வந்ததால் நிலமோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அறிவித்து அதற்கான தனி துறையையே ஏற்படுத்தியதையடுத்து,இதுகுறித்து புகார் அளிக்க எண்ணிய சக்தி சிதம்பரம் நேற்று முன்தினம் மீண்டும் ஒருமுறை வி.எஸ்.பாபுவிடம் பேசி பார்த்துள்ளார். பணத்தை தராவிட்டால் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். புகார் அளிக்க வேண்டாம், பணம் தருகிறோம் என்ற தினகரன் அலுவலகத்திற்கு வரவழைத்து கடுமையாக சக்தி சிதம்பரத்தை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து துரத்தியுள்ளனர்.
மேற்கண்ட சம்பவங்களை புகாராக எழுதி ரூ.5 கோடி சொத்தை ரூ.85 லட்சம் கொடுத்து அபகரித்த நிலத்தை திரும்ப தரவும், எந்திரன் படத்தின் முதலீடான அசல் தொகை ரூ.4 கோடியை திரும்ப தர வேண்டும் என்று கேட்டு கமிஷனரிடம் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் இரண்டாவது புகாரில் எந்திரன் படத்தை 8 தியேட்டர்களில் வெளியிட உரிமம் அளித்து சன்பிக்சர்ஸ் சக்சேனா ரூ.4 கோடி வாங்கிக் கொண்டு 7 தியேட்டர்களுக்கு மட்டும் உரிமம் அளித்துள்ளார். ரூ.1.50 கோடி வசூலாகும் முக்கியமான தியேட்டரை ஒப்பந்தப்படி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் சக்தி சிதம்பரத்திற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாம். இதுபற்றி நஷ்ட தொகையை சக்தி சிதம்பரம் கேட்டபோது சக்சேனா, அய்யப்பன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மிரட்டி தாக்கி அனுப்பியுள்ளனர். இதுபற்றி தனது இரண்டாவது புகாரில் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
வி.எஸ்.பாபு மீதும், சக்சேனா மீதும் இயக்குநர் சக்தி சிதம்பரம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே புகாரை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜிடமும் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி