எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.7 - பல கோடி ரூபாய் பண மோசடி செய்து அதை திருப்பிக் கேட்ட தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வடசென்னை தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு, சன்பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன், வி.எஸ்.பாபு அண்ணன் மகன் தினகரன் ஆகியோர் மீது சினிமா இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர காவல் கமிஷனரிடம் புகார் அளித்தார். நேற்று சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இயக்குநர் சக்தி சிதம்பரம் வந்து கமிஷனர் திரிபாதியை சந்தித்து 2 புகார்களை அளித்தார். அதில் ஒரு புகாரில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு மற்றும் அவரது அண்ணன் மகன் ஜெ.தினகரன் ஆகியோர் மீதும், மற்றொரு புகார் சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீதும் அளித்தார்.
முதல் புகாரில் சக்தி சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது:-
சன் பிக்சர்ஸ் எடுத்து இயக்குநர் சங்கர் இயக்கி ரஜனிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் செங்கல்பட்டு ஏரியாவில் 8 திரையரங்குகளில் திரையிடும் உரிமையை ரூ.4 கோடி கொடுத்து நான் பெற்றேன். இதை கேள்விபட்டு தன்னை அணுகிய வி.எஸ்.பாபு, தனது அண்ணன் மகன் ஜெ.தினகரன் சினிமா தொழில் செய்ய விருப்பம் உள்ளதால் அவரை எந்திரன் பட விநியோகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். செல்வாக்கு மிக்க பிரமுகர் என்பதால் சக்தி சிதம்பரம் எதுவும் சொல்லாமல் ஒத்துக் கொண்டுள்ளார்.
அதன்பின் படத்தின் வரவு- செலவு கணக்கையும் தினகரனே பார்த்துள்ளார். இதனிடையே சக்தி சிதம்பரத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான 23 1ற2 சென்ட் நிலம் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ளது. ஒரு வங்கியில் ரூ.85 லட்சத்திற்கு அடமானத்தில் இருந்துள்ளது. இந்த நிலத்தை மீட்டு உரிய விலைக்கு விற்க சக்தி சிதம்பரத்திற்கு அவரது உறவினர்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இந்த அடமான நிலம் பற்றி ஜெ.தினகரனிடம் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். உடனே தினகரன் எங்கள் தொழிலே அதுதான், அடமான நிலத்தை மீட்டு விற்றுத் தருவதுதான் எங்கள் வேலை என்று கூறியுள்ளார்.
பின்பு சக்தி சிதம்பரத்திடம் வி.எஸ்.பாபு கோஷ்டியினர் ரூ.4 கோடிக்கு அந்த நிலத்தை விலை பேசி உள்ளனர். முதலில் ரூ.85 லட்சத்தை சக்தி சிதம்பரத்திடம் கொடுத்து நிலப்பத்திரத்தை மீட்டு வரும்படி கூறியுள்ளனர். பத்திரப்பதிவு நடைபெறும்போது மீதி தொகையை தருவதாக கூறியுள்ளனர். சொன்னபடி சக்தி சிதம்பரம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி மீதி ரூ.3 கோடியே 15 லட்சத்தை தராமல் வி.எஸ்.பாபு, தினகரன் கோஷ்டியினர் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுபற்றி சக்தி சிதம்பரம் நிலத்துக்கான பணம் ரூ.3 கோடியே 15 லட்சம் மற்றும் எந்திரன் விநியோகம் சம்பந்தமான வரவு பணத்தையும் சரிபார்த்து பணத்தை ஒப்படைக்கும்படி வி.எஸ்.பாபு மற்றும் தினகரனிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் கிடையாது, பணத்தை கேட்டால் உங்கள் எல்லோரையும் தொலைத்துக் கட்டி விடுவேன். துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், எனக்கும் உள்ள உறவு உனக்கு தெரியாதா? சினிமா துறையில் இதுவே உனது கடைசி வியாபாரமாகி விடும் என்று மிரட்டி அனுப்பி விட்டனர்.
இதன்பின்பு இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் மவுனமாக இருந்தவர் அ.தி.மு.க. ஆட்சி வந்ததால் நிலமோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அறிவித்து அதற்கான தனி துறையையே ஏற்படுத்தியதையடுத்து,இதுகுறித்து புகார் அளிக்க எண்ணிய சக்தி சிதம்பரம் நேற்று முன்தினம் மீண்டும் ஒருமுறை வி.எஸ்.பாபுவிடம் பேசி பார்த்துள்ளார். பணத்தை தராவிட்டால் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். புகார் அளிக்க வேண்டாம், பணம் தருகிறோம் என்ற தினகரன் அலுவலகத்திற்கு வரவழைத்து கடுமையாக சக்தி சிதம்பரத்தை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து துரத்தியுள்ளனர்.
மேற்கண்ட சம்பவங்களை புகாராக எழுதி ரூ.5 கோடி சொத்தை ரூ.85 லட்சம் கொடுத்து அபகரித்த நிலத்தை திரும்ப தரவும், எந்திரன் படத்தின் முதலீடான அசல் தொகை ரூ.4 கோடியை திரும்ப தர வேண்டும் என்று கேட்டு கமிஷனரிடம் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் இரண்டாவது புகாரில் எந்திரன் படத்தை 8 தியேட்டர்களில் வெளியிட உரிமம் அளித்து சன்பிக்சர்ஸ் சக்சேனா ரூ.4 கோடி வாங்கிக் கொண்டு 7 தியேட்டர்களுக்கு மட்டும் உரிமம் அளித்துள்ளார். ரூ.1.50 கோடி வசூலாகும் முக்கியமான தியேட்டரை ஒப்பந்தப்படி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் சக்தி சிதம்பரத்திற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாம். இதுபற்றி நஷ்ட தொகையை சக்தி சிதம்பரம் கேட்டபோது சக்சேனா, அய்யப்பன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மிரட்டி தாக்கி அனுப்பியுள்ளனர். இதுபற்றி தனது இரண்டாவது புகாரில் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
வி.எஸ்.பாபு மீதும், சக்சேனா மீதும் இயக்குநர் சக்தி சிதம்பரம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே புகாரை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜிடமும் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா
15 Sep 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன்னனோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.