எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், மார்ச்.11 - தமிழகத்தில் அரசியல் மாற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைவதற்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மா.கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
திண்டுக்கல்லில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மா.கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் மணிக்கூண்டில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், சி.பி.எம். மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்.வரதராஜன், எம்.எல்.ஏ. பாலபாரதி, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் பாண்டி, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், நம்முடைய தேசத்தில் மக்கள் இரண்டு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒன்று மிகப்பெரிய ஊழல், மற்றொன்று தொடர்ச்சியான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. இதனை ஏற்படுத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தேசத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். நாட்டில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய பணத்தை திட்டமிட்டு மறுவழியில் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அதனை மறுத்தது. கூட்டுக்குழுவை அமைக்க தயாராக இல்லை. ஏனெனில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் அம்பலப்பட்டு விடும் என்பதற்காகத் தான். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்பு தான் சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது. பிரதமரும், தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒன்றுமே நடக்கவில்லையெய தொடர்ந்து கூறி வந்தனர். 192 நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக லைசன்ஸ் வழங்கியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இதனை தடுக்க பிரதமரிடம் வலியுறுத்திய போதும் பிரதமர் ராசாவிற்கு கடிதம் மட்டுமே எழுதினார். அதன்பின்னர் தான் போலி நிறுவனங்களுக்கும், கள்ள நிறுவனங்களுக்கும் ராசா 2008 ஜனவரியில் அனுமதி வழங்கினார். இதனைத் தடுக்காத பிரதமர் பரிசுத்தமானவரா?
ராசாவின் அறிவாற்றல் காரணமாகவும், திறமையின் காரணமாகவும் தான் இன்று கிராம மக்கள் முதற்கொண்டு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், அதுவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல. நாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தான் இவ்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்குவதற்கு தனியார் கம்பெனிகள் தயாராக இருந்தன. ஆனால் அவைகளுக்கு எல்லாம் வழங்காமல் மிகக்குறைந்த விலையில் சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பது தான் உண்மை. இத்தொகை தேசத்திற்கு ஒரு ஆண்டிற்கு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம். கல்வித்தேவைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். சுகாதாரம், கல்வி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லப்படவேண்டிய பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். ராசா கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது.
முறைகேடாக வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்து மறு ஏலம் விடப்பட்டு எந்த நிறுவனம் அதிகமாக வாங்க முன்வருகிறதோ அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்மூலம் தான் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் காங்கிரஸும், பங்காளியான தி.மு.க. அரசும் இதனை செய்ய முன்வராது. ஏனெனில் அலைக்கற்றை பெற்ற பல ஆயிரம் கோடி ஊழல் பணம் அம்பலமாகி விடும் என்பதற்காகத் தான்.
மத்திய அமைச்சரவையில் உள்ள ஆறு தி.மு.க. அமைச்சர்கள் மட்டும் இவ்வளவு பெரிய தொகையைக் கொள்ளையடித்தார்கள் என்றால், 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்? தி.மு.க. ஊழலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டு கால மிகப்பெரிய ஊழல் ஆட்சியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளனர். ஒரே குடும்பமே அத்தனை துறையிலும் ஆதிக்கம் வைத்திருப்பதை எத்தனை காலம் தான் பொறுக்க முடியும் என்பதை முடிவு கட்டும் காலம் வந்து விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காததாலும், தகுதிக்கேற்ற பணி கிடைக்காததாலும் அல்லல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை. நெசவாளர்கள், கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நல்ல அரசை எதிர்பார்த்திருக்கின்றனர். தி.மு.க. அரசால் அதை நிறைவேற்ற முடியாது. இந்த அரசு தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளவே ஆட்சி செய்கிறது. எனவே ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மா.கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்திட தமிழக மக்கள் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.