எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் வீடு, உறவினர் வீடுகள், கல்லூரி உட்பட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கொத்து கொத்தாக சாவிகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி விபரம் வருமாறு:-
தி.மு.க.வில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருப்பவர் துரைமுருகன். கருணாநிதி குடும்ப பிரச்சினைகளில் ஆலோசனை கூறும் அளவுக்கு நெருக்கமானவர். அவர் 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி அமைச்சரவையில் தொடர்ந்து அமைச்சராக இருந்து வருபவர். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்பு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
புதிய தலைமை செயலகம் கட்ட ஆரம்பித்த புதில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மீது புகார்கள் வந்ததாகவும், அதிக அளவில் கமிஷன் கேட்டு முறையாக அதை மேலிடத்தில் தராமல் வைத்து கொண்டதாகவும், அதனால் அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கருணாநிதி கழற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
துரைமுருகன் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தாக புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததின் பேரில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சென்னை கோட்டூர்புரத்தில் துரைமுருகன் வசிக்கும் வீட்டிற்கு நேற்று காலை 6.45 மணிக்கு நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டிலிருந்து துரைமுருகனிடம் காரணத்தை கூறி சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவது தெரிந்தவுடன் தி.மு.க.வினர் ஏராளமானோர் வீட்டு முன் திரண்டனர். முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்ரமண்யம், ஆர்.எஸ்.பாரதி, வெங்கடபதி ஆகியோர் வந்தனர். பொன்முடி, மா.சுப்ரமண்யம் ஆகியோரை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
நேற்று காலை சென்னையில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரம் துரைமுருகனின் மகன் வீடு, வணிக வளாகம், சகோதரர் வீடு உட்பட 14 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசாரின் சோதனை மாலை வரை நீடித்தது. இதில் வேலூரில் உள்ள வீட்டில் சோதனையிட்டதில் ஏராளமான ஆவணங்களும், கொத்து சாவிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரின் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களும், சொத்து விபரங்கள் குறித்த கம்ப்யூட்டர் ஆவணங்களும், தஸ்தா வேஜூகளையும் போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.துரைமுருகன் மேல் 13 (2), 13 (1) ஆகிய பிரிவிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடுகளிலும் சோதனை:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடுகள் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 7மணிக்கு லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடு தொழிற்சாலை இன்ஜினரிங் கல்லூரி அவரது தம்பி சிங்காரம் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள வீட்டுலும் சோதனை நடைபெற்றது. மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி நூற்பாலை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மினரல் வாட்டர் நிறுவனத்திலும் ஐடிசி குடோனிலும் திவிர சோதனை நடத்தினர். இதை போல காட்பாடியில் உள்ள கிங்ஸடன் இன்ஜீனரிங் கல்லூரிதுரைமுருகன் பண்ணை விடுகளிலும் சோதனை நடைபெற்றது. இச்சோதனை குறித்து லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் கூறியதாவது முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும் அவரது மனைவி மற்றும் தம்பி சிங்காரம் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். சோதனையின் போது போதிய அதராங்கள் கிடைத்துள்ளதாகவும் இதன் படி குற்றம் எண்-17/2011 பிரிவு 13(2) ஆர் டபிள்யூ 13(1 )(இ) ஆகிய ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தனர். மேலும் சோதனையின் போது சென்னை லஞ்ச ஓழிப்பு டி.எஸ்.பி.அல்லிபாஷா வேலூர் டி.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் கொண்ட போலீஸ்சார் சோதனையில் ஈடுப்பட்டனர். இச்சோதனை 4மணி நேரம் நிடித்தது. காட்பாடி துரைமுருகன் வீட்டில் அவரது மனைவி சாந்தகுமாரி அவரது மகன் கதீர்ஆனந்த ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். இதை தொடர்ந்து சித்தூர் ரோட்டில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடைபெற்றது.
ரெய்டு நடைபெற்ற இடங்கள்
1. சென்னை காந்தி மண்டபம் சாலை கோட்டூர் புரத்திலுள்ள துரைமுருகன் வசிக்கும் இல்லம்.
2. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகர் எண்.7-ல் உள்ள துரைமுருகன் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
3. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகரில் எண்.6-ல் உள்ள துரைமுருகனுடைய மனைவியின் பெயரிலுள்ள வீடு.
4. வேலூர் காட்பாடி காந்திநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள துரைமுருகனின் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
5. வேலூர் காட்பாடி கண்டிப்பேடு கசம் கிராமத்தில் உள்ள துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி.
6. வேலூர் காட்பாடி 2-வது பிரதான சாலையில் உள்ள மினரல் வாட்டர் கொடவுன். இது துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமானது.
7. வேலூர் காட்பாடியில் துரைமுருகன் மகன் பெயரில் இயங்கும் ஐ.டி.சி. சிகரெட் கம்பெனி கொடவுன்.
8. வேலூர் காட்பாடி மேட்டுக்குளம் சித்தூர் பிரதான சாலையில் உள்ள கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜ் இது துரைமுருகன் பெயரில் உள்ள கல்வி அறக்கட்டளை பெயரில் இயங்குகிறது.
9. ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் மகன் ஆனந்த் பெயரில் உள்ள காட்டேஜ்.
10. திருப்பத்தூர் ஏலகிரி ஆதனாவூர் மஞ்சு கொல்லை புதூரில் உள்ள ஸ்பின்னிங் மில் காட்டேஜ் (இது கதிர் மில்லுக்கு சொந்தமான காட்டேஜ்).
11. காஞ்சிபுரம் மேல் கோட்டையூர் கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் உள்ள ராஜம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி.
12. அடையாரில் உள்ள துரை முருகனுக்கு சொந்தமான தேவ் ரெஸிடென்ஸியில் உள்ள 2ஏ, 2சி, 3டி எண்ணுள்ள 3 அபார்மெண்ட் பிளாட்டுகள்.
துரைமுருகனின் சொத்து மதிப்பு:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஜினியரிங் காலேஜ், ஸ்பின்னிங் மில், கோட்டூர்புரத்தின் வீடு, அடையாரில் 3 பிளாட்டுகள், ஏலகிரியில் காட்டேஜ் என்று சொத்து குவித்துள்ள துரைமுருகன் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தனது சொத்துமதிப்பு ரூ.3 கோடியே 39 லட்சம் என்றும், தனக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக ஒரு கார் கூட அவரிடம் இல்லையாம். ஆனால் 3 விலையுயர்ந்த சொகுசு கார்கள் எப்போதும் துரைமுருகன் வீட்டு வாசல் முன்பு நிற்க்கும்.
துரைமுருகன் 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் தனக்கும் தனது மனைவி பெயரிலும் ரூ.6 கோடியே 20 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும், தனது தனிப்பட்ட சொத்து ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும் தனது மனைவி பெயரில் ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துகளும், 2 கோடியே 80 லட்சம் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும், ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டூர்புரத்தில் துரைமுருகனின் வசிக்கும் வீடு பலகோடி பெறும் அடையாரில் உள்ள 3 பிளாட்டுகள் பல கோடி பெறும் பஸ்பின்னிங் மில்லும், என்ஜினியரிங் கல்லூரியும் கட்ட எவ்வளவு கோடி செலவாகும் என்று கூறவே வேண்டாம்.
ஆனால் இவைகளை அறக்கட்டளை பெயரில் பதவி செய்து ஊரையும், நாட்டையும் ஏமாற்றி வருகின்றனர்.
படிப்பு செலவுக்கும் காசில்லாமல் எம்.ஜி.ஆர். உதவியால் படித்த துரைமுருகன்:
துரைமுருகன் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சிலர் மூலம் எம்.ஜி.ஆரை அணுகினாராம். அவரது நிலையை கேட்ட எம்.ஜி.ஆர். நன்றாக படி என்று அனுப்பி வைத்தாராம்.
படிக்க செலவுக்கு பணமில்லை என்று எம்.ஜி.ஆரிடம் போய் நின்றபோது துரைமுருகன் சட்டம் பயில எம்.ஜி.ஆர். பண உதவி செய்தாராம். (அதன் பிறகு கட்சியிலும் மாணவர் அணியில் இருந்த துரைமுருகன் தனது மகன் கல்லூரிக்கு செல்லும் மாணவனாக இருக்கும் வரை மாணவரணி நிர்வாகியாக இருந்தது தனிக்கதை.)
எம்.ஜி.ஆர். உதவியால் படித்து ஆளான துரைமுருகன் 1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்தபோது நன்றி மறந்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் பண்ணினார். இதுபோல் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆர்ரை சட்டசபையில் விமர்சித்உத கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி சட்டசபைக்குள் விழுந்துவிட்டார் துரைமுருகன் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவரை வளர்த்து படிக்க வைத்த பாசத்தில், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஓடிவந்து துரை முருகனை தூக்கி தாங்கிபிடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய வைத்து தாயன்புடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் அப்போது சட்டசபையில் இருந்தார். (மெளனமாக பார்த்துக்கொண்டு) அன்று படிப்பு செலவுக்கே பணமில்லாதவர் இன்று பல கோடிக்கு அதிபதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.